Monday, November 30, 2009

புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்!

புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்!
துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் முஸ்லிம்களே முஸ்லிம்களின் இரத்தத்தை மிகச்சாதாரணமாக ஓட்டுகின்ற சம்பவங்களை நாம் அதிகளவில் பார்த்து வருகின்றோம். அல்லது கேள்விப்படுகின்றோம். அண்மைக்காலங்களில் பாகிஸ்தான், சோமாலியா, யெமன், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்நிலை விருத்தியடைந்து வருகின்றமையை நாம் கண்டோhம். அண்மையில் வெளிவந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையில் சோமாலியாவில் இரு முரண்பட்ட முஸ்லிம் தரப்புக்கள் மோதிக்கொண்டதில் 12 முஸ்லிம்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வறிக்கை இதற்கு கிஸ்மாயோ எனும் சோமாலிய துரைமுக நகரை கைப்பற்றிக்கொள்வதற்காக அஸ்ஸபாப் அணியினரும், கிஸ்புல் இஸ்லாம் அணியினரும் மோதிக்கொண்டதே காரணமாகும் எனத் தெரிவித்திருந்தது. மறுபக்கத்தில் சவூதி அரேபியா மற்றும் ஈரானின் பின்னணியில் யெமனில் முஸ்லிம்கள் தமக்கிடையே மோதிக்கொள்வதைப் பார்க்கிறோம். மேலும் பலஸ்தீனத்தில் அல்பதாஹ் இயக்கமும் ஹமாஸ}ம் மோதிக்கொண்டு இரத்தம் சிந்தியதையும் நாம் மறக்க முடியாது. அதேபோல பாகிஸ்தானில் பாகிஸ்தானின் முஸ்லிம் அரச படைகள் தமது நாட்டையே சேர்ந்த ஸ்வாத் பிராந்தியி முஸ்லிம்களை இராணுவ hPதியாகத்தாக்குவதையும்;, தலிபான்களும் பாகிஸ்தான் துருப்புக்களும் தமக்கிடையே இரத்தம் சிந்திக்கொல்வதும் அப்பிராந்தியத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திவருவதைப்பார்க்கிறோம். வளர்ந்து வரும் இந்த கொடிய செயலை அல்லாஹ்(சுபு) முற்றாக தடைசெய்திருந்தும்கூட அது உதாசீனம் செய்யப்படுகிறது. எமக்கிடையான பிணக்குகளை ஷாPஆவின் அடிப்பiயில் தீர்க்காமல் ஒருவருடன் ஒருவர் பொருதிக்கொண்டு இரத்தம் சிந்தி அவற்றை தீர்க்க முனையும் இந்த வழிமுறை இவ்வுலகில் மாத்திரமல்லாது மறுமையிலும் மிகவும் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மிக ஆழமாக உணர வேண்டும்.
முஸ்லிம்கள் முஸ்லிம்களைக் கொல்வது ஹராமாகும்!
முஸ்லிமை கொலை செய்வதன் விளைவுகள் குறித்து அல்லாஹ்(சுபு) கீழ்வரும் திருமறை வசனத்தில் எச்சரிக்கிறான்.
“ மேலும் எவர், விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும். அதில் அவர் நிரந்தரமாக(த்தங்கி)இருப்பவர். இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு, அவரைச் சபித்தும் விடுவான். மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான். ( 4:93)
மேலும் கீழ்வரும் ஹதீஸில் முஸ்லிம்களை கொலை செய்வதும், துன்புறுத்துவதும் ஹராமாகும் என்பதை முஹம்மத் (ஸல்) தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள்.
“ ஓர் முஸ்லிமை களங்கப்படுத்துவது அத்துமீறலாகும். அவருடன் போராடுவது நிராகரிப்பாகும்.” (புஹாரி, முஸ்லிம்)
ரஸ}ல்(ஸல்) “ முஸ்லிம்களில் இருவர் போராடுவதற்காக எதிர்கொண்டு ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டால் கொலை செய்தவரும், கொல்லப்பட்டவரும் நரகத்தையே சென்றடைவர்.” என்றார்கள். அதற்கு ஸஹாபிகள் கேட்டார்கள் “ அல்லாஹ்வின் து}தரே! நரகம் கொன்றவக்கென்றால் சரி, ஏன் கொல்லப்பட்டவருக்கும் நரகம்” என வினவினார்கள். நபி(ஸல்) சொன்னார்கள். “ அவரிடம் தனது தோழரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” என்றார்கள்.
ஆகவே முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நோக்குடன் யுத்தம் செய்தால் அவர்கள் மறுமையில் பாரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியேற்படும். அதுமாத்திரமல்லாமல் ஒரு உயிரை, அது யாராக இருப்பினும் வீணாகக் கொலை செய்தால் இஸ்லாம் அதனை மிகப்பெரிய குற்றமாக நோக்குகிறது.ரஸ}ல்(ஸல்) கூறினார்கள்,
“ஒரு முஸ்லிமை கொலை செய்வதைவிட இந்த உலகம் அழிக்கப்படுவது அல்லாஹ்(சுபு) பார்வையில் மிகவும் அற்பமானதாகும்.” (திர்மிதி)
ஆகவே முஸ்லிம்களின் தலைமைகள் (ஆட்சியாளர்களோ அல்லது இயக்கத்தலைவர்களோ) ஆளுக்காள் போட்டிபோட்டுக்கொண்டு முஸ்லிம்களுடன் முஸ்லிம்கள் போரிடுவதற்காக அழைப்புவிடுக்கும் இக்காலப்பகுதியில் அத்தகைய பாரது}ரமான செயலிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கட்டுப்படாமல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் முஸ்லிம்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். தமது தலைமைகளை இத்தகைய கொடிய பாவத்தில் ஈடுபட வேண்டாம் என முஸ்லிம்கள் எச்சரித்து இந்தத்தீமையை முற்றாக ஒழிக்க வேண்டும். மாறாக தமது தலைமைகளும், தலைவர்களும் சொன்னார்கள் என்பதனால் இத்தகைய தீமையில் ஈடுபட்டுவிட்டு பின்னர் மறுமையில் அல்லாஹ்(சுபு)விடம் தமது செலுக்காக தலைவர்களை பொறுப்புச்சாட்டுவதில் எத்தகைய பயனுமில்லை. அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்வருமாறு கூறுகிறான்.
“ அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “ நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) து}தருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள். மேலும் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே அவர்கள் எங்களை வழி தவறச் செய்து விட்டார்கள்.”(33:66-67)
இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்
முஸ்லிம்கள் எத்தகைய சமூகப்பின்னணிகளைக் கொண்டவர்களாக, எத்தகைய கருத்துமுரண்பாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உறவு தாம் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை கொல்வது என்பது இன்னொரு முஸ்லிமுக்கு ஒரு தேர்வாகக்கூட இருக்கக்கூடாது. எமது தேசியங்களும், கோத்திரங்களும், மத்ஹப்களும், ஜமாஆத்களும் முஸ்லிம்கள் என்ற எமது அடையாளத்திற்கு முன்னால் வலுவிழந்தவைகள். அவை இரண்டாம் பட்சமானவை. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளாரானபோது முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்கள். அவ்வொப்பந்தம் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கிறது.
“ இது அல்லாஹ்வின் து}தர் முஹம்மத்(ஸல்) அவர்களின் புறத்திலிருந்தான ஓர் ஒப்பந்தமாகும். இது குரைஷிகளைச்சேர்ந்த முஸ்லிம்களினதும்;, யத்திரிப்பின் முஸ்லிம்களினதும், அவர்களை பின்பற்றியவர்களினதும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களினதும், அவர்களுடன் சேர்ந்து போரிட்டவர்களினதும் உறவை ஒழுங்குபடுத்தும் ஆவணமாகும். ஏனையவர்களிலிருந்து வேறுபட்ட இவர்கள் அனைவரும் ஓர் உம்மாஹ் (சமூகம்) ஆகும்.”
சகோரத்துவம் குறித்து அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகிறான்.
“ நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே!” (49:10)
முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து முஹம்மத்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்.
“ எவனுடைய கருத்தில் எனது உயிருள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் எவரும் சுவர்க்கம் புகமாட்டார் விசுவாசித்தவரைத் தவிர, உங்களில் எவரும் விசுவாசித்தவராக மாட்டார், நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை, நான் உங்களுக்கு மத்தியில் அன்பினை ஏற்படுத்தும் ஒன்று குறித்து வழிகாட்டாதிருக்கவா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் (சாந்தி) பரப்புங்கள்.” (முஸ்லிம்)
வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொள்ளும் வழிமுறை
உண்மையில் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அமுல்செய்யக்கூடிய பொறுப்பும், து}ய்மையுமுள்ள தலைமை இல்லாமையே. பெரும்பாலும் இஸ்லாத்தின் நீதியும், பாதுகாப்பும் மட்டுமே, பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவை உருவாகாமல் இருக்க வழி செய்து விடுகின்றன. எனினும் அதனையும் தாண்டி பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் இஸ்லாமியத்தலைமை அதனை ஷாPஆவின் பிரகாசத்தில் தீர்த்து வைத்துவிடுகிறது.
இஸ்லாம் ஒர் சம்பூரண வாழ்க்கைத்திட்டமாகையால் அது எவ்வகையான பேதங்களையும் தீர்த்துவைக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளது. அது கிலாபாவின் குடிமக்களுக்கும், கலீபாவுக்கும் இடையில் தோன்றும் பேதங்கள் தொடக்கம் வௌ;வேறு குழுக்கள், இயக்கங்கள் என்பவற்குக்கிடையில் தோன்றும் சச்சரவுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழும் கருத்துவேறுபாடுகளால் உருவாகும் பிரச்சனைகள் வரை அனைத்து வகையான சச்சரவுகளையும் தனக்கேயுரிய பாங்கில் தீர்த்து வைத்து விடுகிறது. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் பேதங்களைக் களைந்து அவர்களை ஓரணியாக மாற்றி பிளவு எனும் பாரிய ஹராத்திலிருந்து பாதுகாப்பதற்கு கிலாபா ஒன்றினாலேயே சாத்தியமாகும்.கிலாபத் ஆட்சியிலே குடிமக்களுக்கும், கலீபாவுக்குமிடையில் தோன்றும் பிரச்சனைகளை மஹ்கமத் அல் மதாழிம் (அநீதச்செயல்களுக்கான நீதிமன்றம்) என்ற விஷேட நீதிமன்றம் தீர்த்து வைக்கும். அதேபோல ஒரு குறித்த விடயத்தில் ஷாPஆவின் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றும் கருத்து பேதங்கள், கலீபா அந்நிலைப்பாடுகளில் (இஜ்திஹாத்) ஒன்றைத்தேர்வு செய்து முஸ்லிம்கள் மீது அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருப்பதால் அச்சிக்கல் நடைமுறை hPதியாகத் தீர்க்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், கிலாபத்தின் ஒறுமைப்பாடும் உறுதி செய்யப்படும். மேலும் தனிநபர்களோ, அல்லது குழுக்களோ தங்களுக்கிடையில் முரண்பட்டுக்கொண்டால் அவர்களுக்கென நியமிக்கப்படும் நீதிபதி அது குறித்து விசாரித்து அவர் மேற்கொள்ளும் தீர்மானம் இறுதித்தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தகைய பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். எனவே கிலாபத்தை உருவாக்குவதில் நாம் முனைப்புக்காட்டுவது எமது முரண்பாடுகள் பலவற்றை தீர்ப்பதற்காக நாம் எடுத்து வைக்கும் எட்டுக்களாகும். எனினும் கலீபா இல்லாத நிலையில் தாண்தோன்றித்தனமாக இப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கலீபா ஒருவர் இல்லாத நிலையில் கூட முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் ஷாPஆவிற்கு கட்டுப்பட்டு அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தமது முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதன்போது எவர்களேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அத்துமீறி நடந்தால் அவர்களை அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்;வருமாறு கட்டளையிடுகிறான்.
“விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரின்மீது அக்கிரமம் செய்து வரம்பு மீறினால் (வரம்பு மீறிய ) அக்கூட்டத்தவர் (அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்) திரும்பி வரும் வரை நீங்கள் போர் செய்யுங்கள். அக்கூட்டத்தார் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பிவிட்டால் அவ்விருவருக்கிடையே நீதியைக்கொண்டு சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.” (49:9)
ஆகவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது கிலாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் விடயத்தில் கூட வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு இரத்தம் சிந்துவதை இஸ்லாம் முற்றாக மறுத்துரைக்கிறது. இன்று முஸ்லிம் அரசுகளுக்கும் அதனை எதிர்த்து போராடும் போராட்டக்குழுக்களுக்குமிடையே இடம்பெறும் அதிகமான ஆயுதப் போராட்டங்களை எடுத்துக்கொண்டால் அவை இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றத்தை அரச மட்டத்தில், சமூகத்தில் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என முனையும் கூட்டத்தாருக்கும், அவற்றை நசுக்க முனையும் அரசுக்மிடையிலான போராட்டங்களாகவே இருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகளுக்கு காரணமான இந்த முக்கிய விடயம் குறித்து இங்கே மிகச்சுருக்கமாக குறிப்பிடுவது பொருத்தமாகும். இஸ்லாமிய அரசை ஏற்படுத்த அல்லது ஷாPஅத்தை அமுல்படுத்த முனையும் இயக்கங்கள் இஸ்லாம் இது குறித்து எத்தகைய வழிகாட்டலை வழங்குகிறது என்பதை நிதானமாக ஆராய வேண்டும். அத்துடன் கிலாபத்தை நோக்கிய பாதை இஸ்லாத்தின் வெளித்தில் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் எவ்வாறு கிலாபத்தை நோக்கி இயங்கினார்கள் என்பதையும், அவர்களுடைய பாதை எவ்வித முரண்பாடுகளுமின்றி எவ்வாறு தெளிவாக அமைந்தது என்பதையும் ஆராய்வது மிக மிக முக்கியமாகும். அல்லாஹ்(சுபு) தனது து}தரிடம்(ஸல்) நீங்கள் வழிநடாத்தும் உங்கள் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறுங்கள் என்று கீழ்கண்டவாறு சொல்கிறான்.
“(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான்(உங்களை)அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின்மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (12:108)
கிலாபத்தை நோக்கிய ரஸ}ல்(ஸல்) அவர்களின் பயணத்தில் இராணுவ வழிமுறை உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் தெளிவாப்புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் மக்காவில் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அவர்களை முற்றுமுழுதான இஸ்லாமிய முன்மாதிரிகளாக மாற்றினார்கள். இவ்வாறு எவரெல்லாம் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தி;ன ஷரிஆவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு சுவர்க்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பற்ற அவாவுடன் உறுதியாக இஸ்லாத்திற்காக உழைத்தார்கள். பின்னர் ஈமானிலும், திருக்குர்ஆனிலும் நன்கு தோய்த்தெடுக்கப்பட்ட அந்த ஆரம்ப முஸ்லிம்கள் ரஸ}ல்(ஸல்) அவர்களின் தலைமையிலான ஒரு அரசியல் சமூகக் குழுவாக செயற்பட்டு மக்காவில் ஒரு அறிவார்ந்த போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் மேற்கொணடார்கள். இதன்மூலம் அங்கு நிலவிவந்த பழக்க வழக்கங்களையும், சமூக, அரசியல் கட்டமைப்புக்களையும், அங்கு நிலைகொண்டிருந்த பாரம்பரியம், வழக்காறுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் துணைகொண்டு எதிர்த்தார்கள். இவ்வாறு ஜாஹிலிய சமூக வழமைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளையும், தீர்வுகளையும் முன்வைத்தார்கள். இவ்வாறு வளர்ந்த போராட்டத்திற்கு மத்தியில் இஸ்லாத்திற்கான உதவியை அதாவது நுஸ்ராவை சமூகத்தலைமைகளை நோக்கியும், ஆட்சி மற்றும் அதிகார வர்க்கத்தை நோக்கியும் கோருமாறு அல்லாஹ்(சுபு) முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த தீர்க்கமான பாரிய முயற்சியில் இடைவிடாது முயற்சித்துக்கொண்டிருந்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறுதியாக நுஸ்ராவை யத்ரிபின் அன்ஸார்களிடமிருந்து அல்லாஹ்(சுபு) வழங்கினான். இந்த பரிணாம வளர்ச்சியையே நாமும் எமது உம்மத்தின் மத்தியில் பொறுமையுடன் ஏற்படுத்த வேண்டும். இது எமக்குளேயே நாம் ஐக்கியமிளந்து ஒருவரை ஒருவர் குறி வைக்கும் அழிவிலிருந்து பாதுகாக்கும்.
உம்மத்தின் பிளவும் காலத்துவ சக்திகளின் ஆதிக்கமும்
உண்மையில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தம் செய்து கொள்வதன் மிகப்பாரது}ரமான அடுத்த விளைவு காலனித்துவ குப்பார்கள் எம்மீது தமது இரும்புக்கரத்தை மென்மேலும் பிரயோகிப்பதற்கு வழிவிடுவதாகும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியரும் முஸ்லிம் உம்மத்தின் பலத்தை குறைவாக எடைபோடவில்லை. ஐரோப்பாவின் ஒரு பாரிய பகுதியைக் கூட (அந்தலு}சியா - இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் உட்பட்ட பகுதி) முஸ்லிம் உம்மத் கிலாபத்தின் கீழ் பல நு}ற்றாண்டுகளாக ஆட்சி செய்தது என்பதையும், முஸ்லிம் உம்மத்தை ஓர் கட்டமைக்கப்பட்ட உம்மத்தாக யுத்தத்தில் சந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் முஸ்லிம் உம்மத்தை எவ்வாறெல்லாம் பலகீனப்படுத்த முடியுமோ அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எம்மை மென்மேலும் பிளவுபடுத்த முனைவார்கள். இது குறித்து ரஸ}ல்(ஸல்) கூறிய கீழ்வரும் ஹதீஸ் ஓர்; முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
“எவ்வாறு ஒரு பெரிய உணவுப்பாத்திரத்தை நோக்கி மக்கள் சூழ்ந்து கொள்வார்களோ, அதேபோல உங்களை நோக்கி பல தேசங்கள் சூழ்ந்துகொள்ளும். “ அப்பொழுது நாங்கள் சிறிய எண்ணிக்கையில் இருப்போம் என்பதாலா அவ்வாறு ஏற்படும்” என ஒருவர் கேட்டபோது, இல்லை, அப்பொழுது உங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும், எனினும் நீங்கள் வெள்ளத்தில் உருவாகும் நுரைகளைப்போலிருப்பீர்கள்.” (அபுதாவூத்)
எனவே நிராகரிப்பாளர்களின் நாடுகள் எமது பிளவுகளை வலுப்படுத்தி எம்மை ஆதிக்கம் செலுத்த முனைவார்கள் என்பதையும், இதனையே காலணித்துவ தசாப்த்தங்களில் அவர்கள் நேரடியாக மேற்கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. காலனித்துவ நாடுகள் எம்மீது முதலாளித்துவம் என்ற குப்ர் கட்டமைப்பை திணித்து அவர்களின் அரசியற் கைதிகளாக வைத்துக்கொள்ள முனைந்தார்கள். இதன்மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தி எமது வளங்களை அளவுகணக்கின்றி சுரண்டினார்கள். “ பிளவுபடுத்துதலும், ஆக்கிரமித்தலும்” என்ற இந்த யுக்தியை டி.ஈ. லோரன்ஸ் (லோரன்ஸ் ஒப் அரேபியா) பின்வருமாறு கூறுகிறான். “அவரது அரசியல் மாற்றம் ஓர் வன்முறையான அரசியல் மாற்றமாக உருவெடுக்க செய்துவிட்டால் இஸ்லாம் என்ற அந்த சக்தியின் மீதான எமது அச்சத்தை அழித்துவிடலாம். பிரிப்பதன் மூலம் இஸ்லாத்தை அதன் இதயத்திலேயே அதற்கு எதிராகவே திருப்பிவிடலாம். பின்னர் துருக்கியில் ஒரு கலீபா இருந்து, அரேபியாவில் ஒரு கலீபா இருந்து மதச்சண்டை உருவாகும். பின்னர் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலான ஒன்றாக இருக்காது”. இந்த யுக்தியை பின்பற்றியே சைக் - பிக்கட் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பூமி பிரித்தானியாவுக்கும், பிரான்ஸிற்குமிடையே பங்கு போடப்பட்டது. இந்த ஒப்பந்தமும், ஏனைய ஐரோப்பிய சூழ்ச்சித்திட்டங்களுமே ஒரே கிலாபத்தின் கீழ் இணைந்திருந்த முஸ்லிம் தேசம் இன்று ஐம்பதுக்குமேற்பட்ட தேசங்களாக பிரிந்து முஸ்லிம்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலையை தோற்றிவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்களின் வழித்தடத்ததை பின்பற்றி அதற்கு தலைமைப்பொறுப்பை ஏற்று இன்று ஐக்கிய அமெரிக்கர் தொடர்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை பிளவுபடுத்தி எமது தேசத்தை தாம் விரும்பியவாறு பிரித்து, கூறுபோட்டு வரைந்தெடுத்த தேசப்படத்தை அமெரிக்கா திருப்த்தியுடன் பார்க்கவில்லை. மென்மேலும் அத்தேசங்களை கூறுபோட்டு தனது வேட்டைக்கேற்ற ஒரு புதிய தேச வரைபடத்தை வரைவதற்கு முஸ்லிம் தேசத்திற்குள் கால்பதித்து நிற்கிறது. முஸ்லிம் தேசங்களை மேன்மேலும் பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் அமெரிக்க இராணுவ துருப்புக்களின் சஞ்சிகையொன்றில் 2006ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இத்திட்டத்தில் ஈராக், துருக்கி, பாக்கிஸ்தான், சவூதி அரேபியா உட்பட மேலும் பல முஸ்லிம் நாடுகளை மென்மேலும் பலகீனமான சிற்சிறு நாடுகளாக பிளவுபடுத்தும் சூட்சுமை அடங்கியிருந்தது. இந்தத்திட்டத்தின் அறுவடையையே ஈராக்கிலும், தற்போது பாக்கிஸ்தானிலும் நாம் கண்டு வருகிறோம். எனவே ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. ஓர் உம்மத் என்ற கோட்பாடுடையவர்களை “உம்மைடிஸ்” என்று அழைக்கும் “ராண்ட்” என்ற அமெரிக்கச் சிந்தனைத் தளமொன்று ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் வியூகம்’ என்ற தனது கட்டுரையில் எத்தகைய வெட்கமுமற்று.“ முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக பழமைவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள். பழமைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்குமிடையில் கூட்டிணைவு ஏற்படுவதை மட்டந்தட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.
இவ்வாறு குப்பார்கள் தமது குறிக்கோளில் தெளிவுடன் வெளிப்படையாகவே எம்முடன் மோதிவரும் நிலையில் நாம் எமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு அவர்கள் விரித்த வலையில் அதுவும் அவர்கள் இங்கே வலையை விரித்து வைத்துள்ளோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற பொழுதும்கூட நாம் அல்லாஹ்(சுபு) மாறு செய்த நிலையில் அதற்குள் சென்று அகப்பட்டுக்கொள்வோமானால் எம்மை எப்படி வர்ணிப்பது.
எனவே கிலாபத்தை நிலைநாட்டுவதன் மூலமாக முஸ்லிம்களை முரண்பாடுகளிலிருந்து பாதுகாத்து அவற்றை ஷாPஆவின் அடிப்படையில் தீர்த்து வைத்து எதிரிகளின் சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு நீதியான ஆட்சியாளரை அல்லாஹ்(சுபு) எமக்கு நல்குவானாக!
“நிச்சமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் நன்கறிந்தவன். (யாவரையும்) நன்குணர்பவன்.”(49:13)
துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் முஸ்லிம்களே முஸ்லிம்களின் இரத்தத்தை மிகச்சாதாரணமாக ஓட்டுகின்ற சம்பவங்களை நாம் அதிகளவில் பார்த்து வருகின்றோம். அல்லது கேள்விப்படுகின்றோம். அண்மைக்காலங்களில் பாகிஸ்தான், சோமாலியா, யெமன், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்நிலை விருத்தியடைந்து வருகின்றமையை நாம் கண்டோhம். அண்மையில் வெளிவந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையில் சோமாலியாவில் இரு முரண்பட்ட முஸ்லிம் தரப்புக்கள் மோதிக்கொண்டதில் 12 முஸ்லிம்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வறிக்கை இதற்கு கிஸ்மாயோ எனும் சோமாலிய துரைமுக நகரை கைப்பற்றிக்கொள்வதற்காக அஸ்ஸபாப் அணியினரும், கிஸ்புல் இஸ்லாம் அணியினரும் மோதிக்கொண்டதே காரணமாகும் எனத் தெரிவித்திருந்தது. மறுபக்கத்தில் சவூதி அரேபியா மற்றும் ஈரானின் பின்னணியில் யெமனில் முஸ்லிம்கள் தமக்கிடையே மோதிக்கொள்வதைப் பார்க்கிறோம். மேலும் பலஸ்தீனத்தில் அல்பதாஹ் இயக்கமும் ஹமாஸ}ம் மோதிக்கொண்டு இரத்தம் சிந்தியதையும் நாம் மறக்க முடியாது. அதேபோல பாகிஸ்தானில் பாகிஸ்தானின் முஸ்லிம் அரச படைகள் தமது நாட்டையே சேர்ந்த ஸ்வாத் பிராந்தியி முஸ்லிம்களை இராணுவ hPதியாகத்தாக்குவதையும்;, தலிபான்களும் பாகிஸ்தான் துருப்புக்களும் தமக்கிடையே இரத்தம் சிந்திக்கொல்வதும் அப்பிராந்தியத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திவருவதைப்பார்க்கிறோம். வளர்ந்து வரும் இந்த கொடிய செயலை அல்லாஹ்(சுபு) முற்றாக தடைசெய்திருந்தும்கூட அது உதாசீனம் செய்யப்படுகிறது. எமக்கிடையான பிணக்குகளை ஷாPஆவின் அடிப்பiயில் தீர்க்காமல் ஒருவருடன் ஒருவர் பொருதிக்கொண்டு இரத்தம் சிந்தி அவற்றை தீர்க்க முனையும் இந்த வழிமுறை இவ்வுலகில் மாத்திரமல்லாது மறுமையிலும் மிகவும் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மிக ஆழமாக உணர வேண்டும்.
முஸ்லிம்கள் முஸ்லிம்களைக் கொல்வது ஹராமாகும்!
முஸ்லிமை கொலை செய்வதன் விளைவுகள் குறித்து அல்லாஹ்(சுபு) கீழ்வரும் திருமறை வசனத்தில் எச்சரிக்கிறான்.
“ மேலும் எவர், விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும். அதில் அவர் நிரந்தரமாக(த்தங்கி)இருப்பவர். இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு, அவரைச் சபித்தும் விடுவான். மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான். ( 4:93)
மேலும் கீழ்வரும் ஹதீஸில் முஸ்லிம்களை கொலை செய்வதும், துன்புறுத்துவதும் ஹராமாகும் என்பதை முஹம்மத் (ஸல்) தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள்.
“ ஓர் முஸ்லிமை களங்கப்படுத்துவது அத்துமீறலாகும். அவருடன் போராடுவது நிராகரிப்பாகும்.” (புஹாரி, முஸ்லிம்)
ரஸ}ல்(ஸல்) “ முஸ்லிம்களில் இருவர் போராடுவதற்காக எதிர்கொண்டு ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டால் கொலை செய்தவரும், கொல்லப்பட்டவரும் நரகத்தையே சென்றடைவர்.” என்றார்கள். அதற்கு ஸஹாபிகள் கேட்டார்கள் “ அல்லாஹ்வின் து}தரே! நரகம் கொன்றவக்கென்றால் சரி, ஏன் கொல்லப்பட்டவருக்கும் நரகம்” என வினவினார்கள். நபி(ஸல்) சொன்னார்கள். “ அவரிடம் தனது தோழரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” என்றார்கள்.
ஆகவே முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நோக்குடன் யுத்தம் செய்தால் அவர்கள் மறுமையில் பாரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியேற்படும். அதுமாத்திரமல்லாமல் ஒரு உயிரை, அது யாராக இருப்பினும் வீணாகக் கொலை செய்தால் இஸ்லாம் அதனை மிகப்பெரிய குற்றமாக நோக்குகிறது.ரஸ}ல்(ஸல்) கூறினார்கள்,
“ஒரு முஸ்லிமை கொலை செய்வதைவிட இந்த உலகம் அழிக்கப்படுவது அல்லாஹ்(சுபு) பார்வையில் மிகவும் அற்பமானதாகும்.” (திர்மிதி)
ஆகவே முஸ்லிம்களின் தலைமைகள் (ஆட்சியாளர்களோ அல்லது இயக்கத்தலைவர்களோ) ஆளுக்காள் போட்டிபோட்டுக்கொண்டு முஸ்லிம்களுடன் முஸ்லிம்கள் போரிடுவதற்காக அழைப்புவிடுக்கும் இக்காலப்பகுதியில் அத்தகைய பாரது}ரமான செயலிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கட்டுப்படாமல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் முஸ்லிம்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். தமது தலைமைகளை இத்தகைய கொடிய பாவத்தில் ஈடுபட வேண்டாம் என முஸ்லிம்கள் எச்சரித்து இந்தத்தீமையை முற்றாக ஒழிக்க வேண்டும். மாறாக தமது தலைமைகளும், தலைவர்களும் சொன்னார்கள் என்பதனால் இத்தகைய தீமையில் ஈடுபட்டுவிட்டு பின்னர் மறுமையில் அல்லாஹ்(சுபு)விடம் தமது செலுக்காக தலைவர்களை பொறுப்புச்சாட்டுவதில் எத்தகைய பயனுமில்லை. அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்வருமாறு கூறுகிறான்.
“ அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “ நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) து}தருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள். மேலும் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே அவர்கள் எங்களை வழி தவறச் செய்து விட்டார்கள்.”(33:66-67)
இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்
முஸ்லிம்கள் எத்தகைய சமூகப்பின்னணிகளைக் கொண்டவர்களாக, எத்தகைய கருத்துமுரண்பாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உறவு தாம் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை கொல்வது என்பது இன்னொரு முஸ்லிமுக்கு ஒரு தேர்வாகக்கூட இருக்கக்கூடாது. எமது தேசியங்களும், கோத்திரங்களும், மத்ஹப்களும், ஜமாஆத்களும் முஸ்லிம்கள் என்ற எமது அடையாளத்திற்கு முன்னால் வலுவிழந்தவைகள். அவை இரண்டாம் பட்சமானவை. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளாரானபோது முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்கள். அவ்வொப்பந்தம் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கிறது.
“ இது அல்லாஹ்வின் து}தர் முஹம்மத்(ஸல்) அவர்களின் புறத்திலிருந்தான ஓர் ஒப்பந்தமாகும். இது குரைஷிகளைச்சேர்ந்த முஸ்லிம்களினதும்;, யத்திரிப்பின் முஸ்லிம்களினதும், அவர்களை பின்பற்றியவர்களினதும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களினதும், அவர்களுடன் சேர்ந்து போரிட்டவர்களினதும் உறவை ஒழுங்குபடுத்தும் ஆவணமாகும். ஏனையவர்களிலிருந்து வேறுபட்ட இவர்கள் அனைவரும் ஓர் உம்மாஹ் (சமூகம்) ஆகும்.”
சகோரத்துவம் குறித்து அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகிறான்.
“ நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே!” (49:10)
முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து முஹம்மத்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்.
“ எவனுடைய கருத்தில் எனது உயிருள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் எவரும் சுவர்க்கம் புகமாட்டார் விசுவாசித்தவரைத் தவிர, உங்களில் எவரும் விசுவாசித்தவராக மாட்டார், நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை, நான் உங்களுக்கு மத்தியில் அன்பினை ஏற்படுத்தும் ஒன்று குறித்து வழிகாட்டாதிருக்கவா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் (சாந்தி) பரப்புங்கள்.” (முஸ்லிம்)
வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொள்ளும் வழிமுறை
உண்மையில் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அமுல்செய்யக்கூடிய பொறுப்பும், து}ய்மையுமுள்ள தலைமை இல்லாமையே. பெரும்பாலும் இஸ்லாத்தின் நீதியும், பாதுகாப்பும் மட்டுமே, பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவை உருவாகாமல் இருக்க வழி செய்து விடுகின்றன. எனினும் அதனையும் தாண்டி பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் இஸ்லாமியத்தலைமை அதனை ஷாPஆவின் பிரகாசத்தில் தீர்த்து வைத்துவிடுகிறது.
இஸ்லாம் ஒர் சம்பூரண வாழ்க்கைத்திட்டமாகையால் அது எவ்வகையான பேதங்களையும் தீர்த்துவைக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளது. அது கிலாபாவின் குடிமக்களுக்கும், கலீபாவுக்கும் இடையில் தோன்றும் பேதங்கள் தொடக்கம் வௌ;வேறு குழுக்கள், இயக்கங்கள் என்பவற்குக்கிடையில் தோன்றும் சச்சரவுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழும் கருத்துவேறுபாடுகளால் உருவாகும் பிரச்சனைகள் வரை அனைத்து வகையான சச்சரவுகளையும் தனக்கேயுரிய பாங்கில் தீர்த்து வைத்து விடுகிறது. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் பேதங்களைக் களைந்து அவர்களை ஓரணியாக மாற்றி பிளவு எனும் பாரிய ஹராத்திலிருந்து பாதுகாப்பதற்கு கிலாபா ஒன்றினாலேயே சாத்தியமாகும்.கிலாபத் ஆட்சியிலே குடிமக்களுக்கும், கலீபாவுக்குமிடையில் தோன்றும் பிரச்சனைகளை மஹ்கமத் அல் மதாழிம் (அநீதச்செயல்களுக்கான நீதிமன்றம்) என்ற விஷேட நீதிமன்றம் தீர்த்து வைக்கும். அதேபோல ஒரு குறித்த விடயத்தில் ஷாPஆவின் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றும் கருத்து பேதங்கள், கலீபா அந்நிலைப்பாடுகளில் (இஜ்திஹாத்) ஒன்றைத்தேர்வு செய்து முஸ்லிம்கள் மீது அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருப்பதால் அச்சிக்கல் நடைமுறை hPதியாகத் தீர்க்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், கிலாபத்தின் ஒறுமைப்பாடும் உறுதி செய்யப்படும். மேலும் தனிநபர்களோ, அல்லது குழுக்களோ தங்களுக்கிடையில் முரண்பட்டுக்கொண்டால் அவர்களுக்கென நியமிக்கப்படும் நீதிபதி அது குறித்து விசாரித்து அவர் மேற்கொள்ளும் தீர்மானம் இறுதித்தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தகைய பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். எனவே கிலாபத்தை உருவாக்குவதில் நாம் முனைப்புக்காட்டுவது எமது முரண்பாடுகள் பலவற்றை தீர்ப்பதற்காக நாம் எடுத்து வைக்கும் எட்டுக்களாகும். எனினும் கலீபா இல்லாத நிலையில் தாண்தோன்றித்தனமாக இப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கலீபா ஒருவர் இல்லாத நிலையில் கூட முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் ஷாPஆவிற்கு கட்டுப்பட்டு அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தமது முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதன்போது எவர்களேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அத்துமீறி நடந்தால் அவர்களை அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்;வருமாறு கட்டளையிடுகிறான்.
“விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரின்மீது அக்கிரமம் செய்து வரம்பு மீறினால் (வரம்பு மீறிய ) அக்கூட்டத்தவர் (அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்) திரும்பி வரும் வரை நீங்கள் போர் செய்யுங்கள். அக்கூட்டத்தார் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பிவிட்டால் அவ்விருவருக்கிடையே நீதியைக்கொண்டு சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.” (49:9)
ஆகவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது கிலாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் விடயத்தில் கூட வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு இரத்தம் சிந்துவதை இஸ்லாம் முற்றாக மறுத்துரைக்கிறது. இன்று முஸ்லிம் அரசுகளுக்கும் அதனை எதிர்த்து போராடும் போராட்டக்குழுக்களுக்குமிடையே இடம்பெறும் அதிகமான ஆயுதப் போராட்டங்களை எடுத்துக்கொண்டால் அவை இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றத்தை அரச மட்டத்தில், சமூகத்தில் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என முனையும் கூட்டத்தாருக்கும், அவற்றை நசுக்க முனையும் அரசுக்மிடையிலான போராட்டங்களாகவே இருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகளுக்கு காரணமான இந்த முக்கிய விடயம் குறித்து இங்கே மிகச்சுருக்கமாக குறிப்பிடுவது பொருத்தமாகும். இஸ்லாமிய அரசை ஏற்படுத்த அல்லது ஷாPஅத்தை அமுல்படுத்த முனையும் இயக்கங்கள் இஸ்லாம் இது குறித்து எத்தகைய வழிகாட்டலை வழங்குகிறது என்பதை நிதானமாக ஆராய வேண்டும். அத்துடன் கிலாபத்தை நோக்கிய பாதை இஸ்லாத்தின் வெளித்தில் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் எவ்வாறு கிலாபத்தை நோக்கி இயங்கினார்கள் என்பதையும், அவர்களுடைய பாதை எவ்வித முரண்பாடுகளுமின்றி எவ்வாறு தெளிவாக அமைந்தது என்பதையும் ஆராய்வது மிக மிக முக்கியமாகும். அல்லாஹ்(சுபு) தனது து}தரிடம்(ஸல்) நீங்கள் வழிநடாத்தும் உங்கள் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறுங்கள் என்று கீழ்கண்டவாறு சொல்கிறான்.
“(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான்(உங்களை)அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின்மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (12:108)
கிலாபத்தை நோக்கிய ரஸ}ல்(ஸல்) அவர்களின் பயணத்தில் இராணுவ வழிமுறை உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் தெளிவாப்புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் மக்காவில் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அவர்களை முற்றுமுழுதான இஸ்லாமிய முன்மாதிரிகளாக மாற்றினார்கள். இவ்வாறு எவரெல்லாம் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தி;ன ஷரிஆவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு சுவர்க்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பற்ற அவாவுடன் உறுதியாக இஸ்லாத்திற்காக உழைத்தார்கள். பின்னர் ஈமானிலும், திருக்குர்ஆனிலும் நன்கு தோய்த்தெடுக்கப்பட்ட அந்த ஆரம்ப முஸ்லிம்கள் ரஸ}ல்(ஸல்) அவர்களின் தலைமையிலான ஒரு அரசியல் சமூகக் குழுவாக செயற்பட்டு மக்காவில் ஒரு அறிவார்ந்த போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் மேற்கொணடார்கள். இதன்மூலம் அங்கு நிலவிவந்த பழக்க வழக்கங்களையும், சமூக, அரசியல் கட்டமைப்புக்களையும், அங்கு நிலைகொண்டிருந்த பாரம்பரியம், வழக்காறுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் துணைகொண்டு எதிர்த்தார்கள். இவ்வாறு ஜாஹிலிய சமூக வழமைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளையும், தீர்வுகளையும் முன்வைத்தார்கள். இவ்வாறு வளர்ந்த போராட்டத்திற்கு மத்தியில் இஸ்லாத்திற்கான உதவியை அதாவது நுஸ்ராவை சமூகத்தலைமைகளை நோக்கியும், ஆட்சி மற்றும் அதிகார வர்க்கத்தை நோக்கியும் கோருமாறு அல்லாஹ்(சுபு) முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த தீர்க்கமான பாரிய முயற்சியில் இடைவிடாது முயற்சித்துக்கொண்டிருந்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறுதியாக நுஸ்ராவை யத்ரிபின் அன்ஸார்களிடமிருந்து அல்லாஹ்(சுபு) வழங்கினான். இந்த பரிணாம வளர்ச்சியையே நாமும் எமது உம்மத்தின் மத்தியில் பொறுமையுடன் ஏற்படுத்த வேண்டும். இது எமக்குளேயே நாம் ஐக்கியமிளந்து ஒருவரை ஒருவர் குறி வைக்கும் அழிவிலிருந்து பாதுகாக்கும்.
உம்மத்தின் பிளவும் காலத்துவ சக்திகளின் ஆதிக்கமும்
உண்மையில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தம் செய்து கொள்வதன் மிகப்பாரது}ரமான அடுத்த விளைவு காலனித்துவ குப்பார்கள் எம்மீது தமது இரும்புக்கரத்தை மென்மேலும் பிரயோகிப்பதற்கு வழிவிடுவதாகும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியரும் முஸ்லிம் உம்மத்தின் பலத்தை குறைவாக எடைபோடவில்லை. ஐரோப்பாவின் ஒரு பாரிய பகுதியைக் கூட (அந்தலு}சியா - இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் உட்பட்ட பகுதி) முஸ்லிம் உம்மத் கிலாபத்தின் கீழ் பல நு}ற்றாண்டுகளாக ஆட்சி செய்தது என்பதையும், முஸ்லிம் உம்மத்தை ஓர் கட்டமைக்கப்பட்ட உம்மத்தாக யுத்தத்தில் சந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் முஸ்லிம் உம்மத்தை எவ்வாறெல்லாம் பலகீனப்படுத்த முடியுமோ அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எம்மை மென்மேலும் பிளவுபடுத்த முனைவார்கள். இது குறித்து ரஸ}ல்(ஸல்) கூறிய கீழ்வரும் ஹதீஸ் ஓர்; முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
“எவ்வாறு ஒரு பெரிய உணவுப்பாத்திரத்தை நோக்கி மக்கள் சூழ்ந்து கொள்வார்களோ, அதேபோல உங்களை நோக்கி பல தேசங்கள் சூழ்ந்துகொள்ளும். “ அப்பொழுது நாங்கள் சிறிய எண்ணிக்கையில் இருப்போம் என்பதாலா அவ்வாறு ஏற்படும்” என ஒருவர் கேட்டபோது, இல்லை, அப்பொழுது உங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும், எனினும் நீங்கள் வெள்ளத்தில் உருவாகும் நுரைகளைப்போலிருப்பீர்கள்.” (அபுதாவூத்)
எனவே நிராகரிப்பாளர்களின் நாடுகள் எமது பிளவுகளை வலுப்படுத்தி எம்மை ஆதிக்கம் செலுத்த முனைவார்கள் என்பதையும், இதனையே காலணித்துவ தசாப்த்தங்களில் அவர்கள் நேரடியாக மேற்கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. காலனித்துவ நாடுகள் எம்மீது முதலாளித்துவம் என்ற குப்ர் கட்டமைப்பை திணித்து அவர்களின் அரசியற் கைதிகளாக வைத்துக்கொள்ள முனைந்தார்கள். இதன்மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தி எமது வளங்களை அளவுகணக்கின்றி சுரண்டினார்கள். “ பிளவுபடுத்துதலும், ஆக்கிரமித்தலும்” என்ற இந்த யுக்தியை டி.ஈ. லோரன்ஸ் (லோரன்ஸ் ஒப் அரேபியா) பின்வருமாறு கூறுகிறான். “அவரது அரசியல் மாற்றம் ஓர் வன்முறையான அரசியல் மாற்றமாக உருவெடுக்க செய்துவிட்டால் இஸ்லாம் என்ற அந்த சக்தியின் மீதான எமது அச்சத்தை அழித்துவிடலாம். பிரிப்பதன் மூலம் இஸ்லாத்தை அதன் இதயத்திலேயே அதற்கு எதிராகவே திருப்பிவிடலாம். பின்னர் துருக்கியில் ஒரு கலீபா இருந்து, அரேபியாவில் ஒரு கலீபா இருந்து மதச்சண்டை உருவாகும். பின்னர் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலான ஒன்றாக இருக்காது”. இந்த யுக்தியை பின்பற்றியே சைக் - பிக்கட் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பூமி பிரித்தானியாவுக்கும், பிரான்ஸிற்குமிடையே பங்கு போடப்பட்டது. இந்த ஒப்பந்தமும், ஏனைய ஐரோப்பிய சூழ்ச்சித்திட்டங்களுமே ஒரே கிலாபத்தின் கீழ் இணைந்திருந்த முஸ்லிம் தேசம் இன்று ஐம்பதுக்குமேற்பட்ட தேசங்களாக பிரிந்து முஸ்லிம்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலையை தோற்றிவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்களின் வழித்தடத்ததை பின்பற்றி அதற்கு தலைமைப்பொறுப்பை ஏற்று இன்று ஐக்கிய அமெரிக்கர் தொடர்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை பிளவுபடுத்தி எமது தேசத்தை தாம் விரும்பியவாறு பிரித்து, கூறுபோட்டு வரைந்தெடுத்த தேசப்படத்தை அமெரிக்கா திருப்த்தியுடன் பார்க்கவில்லை. மென்மேலும் அத்தேசங்களை கூறுபோட்டு தனது வேட்டைக்கேற்ற ஒரு புதிய தேச வரைபடத்தை வரைவதற்கு முஸ்லிம் தேசத்திற்குள் கால்பதித்து நிற்கிறது. முஸ்லிம் தேசங்களை மேன்மேலும் பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் அமெரிக்க இராணுவ துருப்புக்களின் சஞ்சிகையொன்றில் 2006ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இத்திட்டத்தில் ஈராக், துருக்கி, பாக்கிஸ்தான், சவூதி அரேபியா உட்பட மேலும் பல முஸ்லிம் நாடுகளை மென்மேலும் பலகீனமான சிற்சிறு நாடுகளாக பிளவுபடுத்தும் சூட்சுமை அடங்கியிருந்தது. இந்தத்திட்டத்தின் அறுவடையையே ஈராக்கிலும், தற்போது பாக்கிஸ்தானிலும் நாம் கண்டு வருகிறோம். எனவே ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. ஓர் உம்மத் என்ற கோட்பாடுடையவர்களை “உம்மைடிஸ்” என்று அழைக்கும் “ராண்ட்” என்ற அமெரிக்கச் சிந்தனைத் தளமொன்று ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் வியூகம்’ என்ற தனது கட்டுரையில் எத்தகைய வெட்கமுமற்று.“ முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக பழமைவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள். பழமைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்குமிடையில் கூட்டிணைவு ஏற்படுவதை மட்டந்தட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.
இவ்வாறு குப்பார்கள் தமது குறிக்கோளில் தெளிவுடன் வெளிப்படையாகவே எம்முடன் மோதிவரும் நிலையில் நாம் எமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு அவர்கள் விரித்த வலையில் அதுவும் அவர்கள் இங்கே வலையை விரித்து வைத்துள்ளோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற பொழுதும்கூட நாம் அல்லாஹ்(சுபு) மாறு செய்த நிலையில் அதற்குள் சென்று அகப்பட்டுக்கொள்வோமானால் எம்மை எப்படி வர்ணிப்பது.
எனவே கிலாபத்தை நிலைநாட்டுவதன் மூலமாக முஸ்லிம்களை முரண்பாடுகளிலிருந்து பாதுகாத்து அவற்றை ஷாPஆவின் அடிப்படையில் தீர்த்து வைத்து எதிரிகளின் சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு நீதியான ஆட்சியாளரை அல்லாஹ்(சுபு) எமக்கு நல்குவானாக!
“நிச்சமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் நன்கறிந்தவன். (யாவரையும்) நன்குணர்பவன்.”(49:13)

Monday, November 23, 2009

ஆரோக்கியமற்றுப் பிறக்கும் fபல்லூஜா குழந்தைகள்!

ஆரோக்கியமற்றுப் பிறக்கும் fபல்லூஜா குழந்தைகள்!
“சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை” என்ற கூப்பாடோடு நடத்திய சமரில் 100 000 மக்களைக்கொன்றொழித்து, பல மில்லியன் முஸ்லிம்களை அகதிகளாக்கிவிட்டதுடன் முடிந்ததா அவர்களின் தாண்டவம்;!அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஈராக்கில் விதைத்ததன் விளைவுகள் இவை. இங்கே அழுத்துங்கள்:http://www.guardian.co.uk/world/video/2009/nov/14/falluja-children-iraq-conflict

Saturday, November 14, 2009

கலீபாவை பதவிநீக்கம் செய்தல் - عزل الخليفة

கலீ*பாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியம் என்ற விதத்தில் அவரது சொந்த விவகாரத்தின் சூழல் மாற்றம் அடையுமானால் உடனடியாக அவர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும், மேலும் சில சூழலில் அவர் சட்டரீதியாக கலீ*பாவாக பதவியில் தொடரமுடியாது என்றநிலை ஏற்பட்டாலும் அவர் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும், இந்த இரண்டு சூழலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால் முதல் விவகாரத்தில் அவர் பதவிநீக்கம் செய்யப்படும்போது அந்த விவகாரம் ஏற்பட்ட உடனேயே அவருக்கு கட்டுப்படும் கடமை முஸ்லிம்களை விட்டு நீங்கிவிடுகிறது. ஆனால் இரண்டாவது விவகாரத்தில் அவர் உடனேயே பதவிநீக்கம் செய்யப்பட்டாலும் பதவிநீக்கம் நிறைவேற்றப்படும்வரை அவருக்கு கட்டுப்படுவது கடமையாக இருக்கிறது, மூன்று விவகாரங்கள் அவரது சூழலை கடுமையாக பாதிக்கும்போது அதன் காரணமாக அவர் கலீ*பா பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.
முதலாவது விவகாரம்: இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்த்ததாக (مرتد ) ஆகிவிடுதல், இரண்டாவது விவகாரம்: புத்திசுவாதீனமற்ற நிலையை அடைந்த பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருத்தல்,மூன்றாவது விவகாரம்: கலீ*பாவை மிகைக்கக்கூடிய எதிரியால் அவர் பிடிக்கப்பட்டு அதிலிருந்து அவரை விடுவிக்க முடியாத நிலை ஏற்படுதல், இந்த மூன்று சூழல்களிலும் அவர் கலீ*பா பதவியிலிருந்து அகற்றப்படுவார், அவர் பதவிநீக்கம் செய்யப்படுவது பற்றிய முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் உடனே அவர் பதவிநீக்கம் செய்யப்படுவார்.
ஆகவே இத்தகைய சூழலில் அவருக்கு கட்டுப்படுவது கட்டாயமல்ல என்பதோடு இந்த மூன்று விவகாரங்களில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டதற்குரிய ஆதாரம் தென்படுமாயின் அவருடைய கட்டளையை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அதை செயல்படுத்த தேவையில்லை, இருந்தபோதிலும் அவரை பதவிநீக்கம் செய்வதற்கு காரணமாக உள்ள இந்த மூன்று விவகாரங்கள் ஏற்பட்டதற்குரிய ஆதாரங்கள் அநீதிசட்ட நீதிமன்றத்தில்(محكمة المظالم) நிரூபிக்கப்படவேண்டும், அநீதிசட்ட நீதிமன்றம் கலீ*பாவின் பதவிநீக்கம் பற்றி தீர்மானித்து அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டால் உடனேயே முஸ்லிம்கள் வேறொரு கலீபாவை நியமனம் செய்துகொள்ளவேண்டும்.
கீழ்கண்ட ஐந்து விவகாரங்கள் ஏற்படும்போது கலீ*பா பதவியிலிருந்து அவர் உடனடியாக விடுவிக்கப் படாவிட்டாலும் தொடர்ந்து அவர் பதவியில் நீடிக்கமுடியாது.
ஒன்று : வெளிப்படையான பாவச்செயல்களில் ஈடுபடுவதால் அவருடைய நீதிசெலுத்தும் தகுதிக்கு பங்கம் ஏற்படுதல்.
இரண்டு : அவர் பாலியல் மாற்றத்திற்கு உட்படுவதன் மூலம் பெண்ணாக மாறி இரட்டை பாலியல் பண்புகளை(bysexual) கொண்டவராக ஆகிவிடுதல்.
மூன்று : சில நேரங்களில் புத்திசுவாதீனமற்ற நிலைக்கு உட்படுதல், அவ்வப்போது இயல்புநிலைக்கு திரும்பினாலும் தொடர்ந்து பைத்தியம் பிடித்தநிலையில் இருத்தல், இந்நிலை ஏற்படும்போது அவருக்கு பாதுகாப்பாளரையோ அல்லது உதவியாளரையோ நியமிக்கமுடியாது ஏனெனில் கிலாபா ஒப்பந்தம் அவர் மீது தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தப் பட்டுள்ளது, எனவே இத்தகைய நிலை ஏற்படும்போது அவருக்கு பதிலாக மற்றொருவர் அவரது அதிகாரம் பெற்ற உதவியாளராக செயல்படுவதற்கு அனுமதியில்லை.
நான்கு : உடலில் ஊனம் ஏற்படுவதின் முலமோ அல்லது குணப்படுத்தமுடியாத நோய் ஏற்பட்டு செயல்படமுடியாத நிலைக்கு உட்படுவதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ அவர் கலீபாவின் கடமைகளை சரியாக நிறைவேற்ற திறனற்ற நிலைக்கு உட்படுதல், தீனுடைய விவகாரங்களிலும் முஸ்லிம்களின் நலன்களை பேணும் விவகாரத்திலும் கலீபா மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகளை நிறைவேற்றாமல் விட்டுவிடும் நிலை ஏற்படுதல், அதாவது நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணியை நிறைவேற்றாமல் இருத்தல், தற்போதைய கலீ*பாவை நீக்கிவிட்டு புதிய கலீபாவை நியமிப்பதன் மூலம்தான் இந்த பணியை நிறைவேற்றமுடியும் என்ற நிலை ஏற்படும்போது அவரை பதவிநீக்கம் செய்வது வாஜிபாகும்.
ஐந்து : கலீபா மீது மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் ஷரியா அடிப்படையில் அவர் முஸ்லிம்களின் விவகாரங்களை நடத்திச்செல்ல முடியாத நிலை ஏற்படுதல், இந்நிலை ஏற்படும்போது கலீபாவின் பொறுப்புகளை நிறைவேற்றும் ஆற்றலை அவர் சட்டரீதியாக இழந்துவிடுகிறார். எனவே நிச்சயமாக அவர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும், இரண்டு சூழல்களில் கலீபாவுக்கு இந்நிலை ஏற்படுகிறது.
முதலாவதாக : கலீபாவின் பரிவாரத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கலீபா மீது ஆதிக்கம் செலுத்தி அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை ஏற்படுதல், இவ்வாறு ஏற்படும்போது அவர்கள் தங்கள் விருப்பப்படி விவகாரங்களை நடத்திச் செல்வதோடு கலீ*பாவை வற்புறுத்தி தங்கள் அபிப்ராயத்திற்கு ஒப்புக்கொள்ள வைப்பதன் மூலம் அவருடைய சொந்த அபிப்ராயத்தை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்ராயத்திற்கு செயல்படக்கூடும், இத்தகைய நிலை ஏற்படும்போது சூழல் ஆய்வுசெய்யப்படவேண்டும். மற்றவர்களின் ஆதிக்கத்திலிருந்து கலீபா மீட்சிபெறக்கூடும் என்ற நிலை இருந்தால் அதிலிருந்து மீள்வதற்கு அவருக்கு குறுகிய அவகாசம் கொடுக்கப்படவேண்டும். அதிலிருந்து அவர் மீண்டுவிட்டால் பிறகு அவர்மீது ஏற்பட்ட குறைபாடு நீங்கிவிடும் அவ்வாறு அவர் மீளவில்லை என்றால் அவரை உடனே பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்.
இரண்டாவதாக : ஆற்றல்மிக்க எதிரி ஒருவரால் கலீபா பிடிக்கப்பட்டுவிடுதல், இத்தகைய நிலை ஏற்படும்போது சூழல்கள் ஆய்வுசெய்யப்படவேண்டும், கலீபா அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அவருக்கு அவகாசம் அளிக்கப்படவேண்டும். எதிரியின் பிடியிலிருந்து அவர் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருக்குமாயின் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்.
மேற்கண்ட ஐந்து விவகாரங்களில் எந்தவொன்று ஏற்பட்டாலும் கலீபா பதவிநீக்கம் செய்யப்படுவார், குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் ஆதாரத்துடன் அநீதிசட்ட நீதிமன்றத்தில்(محكمة المظالم) சமர்ப்பிக்கும் பட்சத்தில் புதிய கலீபாவை மூன்று நாட்களுக்குள் முஸ்லிம்கள் நியமிப்பதற்கு ஏதுவாக நீதிமன்றம் அவர்மீது செய்யப்பட்ட கிலாபா ஒப்பந்தத்தை ரத்துசெய்து அவரை பதவிநீக்கம் செய்ய தீர்மானிக்கவேண்டும்.

கிலாபத் அமைப்பு தனித்துவஅம்சம் கொண்டது - نظام الخلافة نظام متميز

தனித்துவஅம்சம் கொண்ட கிலாபத் அமைப்பு -نظام الخلافة தொடர்பாக இங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் ஒரு அரசியல் ஆய்வாகும், மேலும் இது ஆட்சியமைப்பின் மிகஉயர்ந்த பதவி குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள சிந்தைனைகள் குறித்தும் மேற்கொள்ளப்படும் ஆய்வாகும், முஸ்லிம்கள் அல்லாத வாசகர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ள சிந்தனைகளின் உண்மைத்தன்மையை தீர்மானித்து அறிந்துகொள்வதற்கு எதார்த்த உண்மைகளைத் தவிர்த்து வேறு எந்த அளவுகோலின் அடிப்படையிலும் ஆய்வு செய்வார்கள் என்றால் அது மிக்பெரும் தவறாகும், அதுபோலவே முஸ்லிம்களும் அல்லாஹ்(சுபு) வின் வேதம் மற்றும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சுன்னா ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டே இந்த சிந்தனைகளை சீர்தூக்கி ஆய்வுசெய்து தீர்மானிக்கவேண்டும், இதுஏனெனில் இந்த சிந்தனைகளின் உண்மைத்தன்மையை இதனுடன் தொடர்பு இல்லாத வேறு சிந்தனையை வைத்து தீர்மானிக்க முடியாது, இந்த சிந்தனையை எதார்த்த உண்மைகளோடு பொருந்திப்போகும் தன்மையை வைத்தோ அல்லது சத்தியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட இதன் அசலான விஷயத்தோடு (இஸ்லாம்) வைத்தோதான் தீர்மானிக்க முடியும், ஆகவே இந்நூலை படிக்கும் வாசகர்கள் இந்த சிந்தனைகளை துல்லியமாகவும் கவனத்துடனும் எதார்த்த உண்மைகள் பற்றிய விழிப்புணர்வுடனும் மட்டுமே படிக்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம், ஆகவே இஸ்லாமிய நாடுகளில் இடம்பெற்றுள்ள ஆட்சியமைப்புகளிலும் உலகின் மற்ற பகுதிகளில் இடம்பெற்றுள்ள ஆட்சியமைப்புகளிலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் குழப்பங்களையும் வெளிப்டையாகவும் தெளிவாகவும் நாம் அறிந்திருக்கும் நிலையில் இந்த ஆட்சியமைப்பின் சிந்தனைகளை ஆழ்ந்து சிந்திப்பதின் மூலமாக உலகிலுள்ள ஆட்சியமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வையும் மனிதர்கள் மீது ஆட்சிசெலுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மக்களின் வாழ்வியல் விவகாரங்களை கவனித்துக் கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும், மக்களை ஆட்சிபுரியும் விவகாரத்தில் சரியான தீர்வுகள் காணப்படவேண்டுமானால் எதார்த்த உண்மைகளுக்கு பொருத்தமான முறையில் அல்லது இறைசட்டங்களுக்கு இணக்கமான முறையில் சிந்தனைகளை வழிநடத்தும் விதமாக அதன் அளவுகோல்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளவேண்டும், அதாவது சிந்தனையை மேற்கொள்வதற்கு ஒன்று எதார்த்த உண்மைகளை (reality-الواقع) அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது ஷரியா ஆதாரங்களை(الدليل الشرعي - shar'ia evidence) அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆட்சியமைப்பு (ruling system-نظام الحكم) பற்றிய சரியான கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக ஆட்சிமுறையை அளவுகோலாக ஆக்கிக்கொண்டு சிந்தனை மேற்கொள்வதோ அல்லது அதன் கருத்துக்களில் தாக்கம் அடைந்த நிலையில் சிந்தனை மேற்கொள்வதோ தவறான அனுகுமுறையாகும், பிரபலமான பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு ஜனநாயக ஆட்சிமுறை சிறந்த கொள்கை என்று கருதப்பட்டு உலகநாடுகளில் பரவியிருக்கின்ற காரணத்தால் அதன் அர்த்தத்தை விளங்கிக்கொண்டதில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் மேற்குநாடுகள் அதை ஏற்றுஅமல்படுத்திய பின்னர் கீழைநாடுகளும் அதை ஏற்றுஅமல்படுத்தின, அல்லாஹ்(சுபு) வும் அவனுடைய தூதரும்(ஸல்) கிலா*பாத்தை ஆட்சியமைப்பாக வழங்கியிருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களும். கிலா*பத்தை முஸ்லிம்கள் நிலைநாட்டினார்கள் என்பதை தெளிவாக விளங்கியிருக்கும் முஸ்லிம்களும் வேறுபாடின்றி ஜனநாயகத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர், ஜனநாயகம் என்ற பெயரில் அல்லது ஜனநாயக சிந்தனைகள் என்ற போர்வையில் இந்த முஸ்லிம்கள் தங்கள் அபிப்ராயங்களை மற்றவர்களுக்காக சமரசம் செய்துகொள்கின்றனர், ஆகவே கிலா*பத் பற்றிய இந்த சிந்தனைகளை ஆய்வுசெய்யும்போது வேறெந்த சிந்தனைகளையும் குறிப்பாக ஜனநாயக சிந்தனைகளை அளவுகோலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மறுமுறையும் நாம் வாசகர்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம், உதாரணமாக. ஆட்சியமைப்புகள் பற்றி ஆய்வுசெய்யும் சிலர் தங்கள் நாடுகளில் பிரபலமாக இருக்கும் அரசமைப்புகளை (form of governments) கவனித்திருப்பார்கள். மேலும் வரலாற்றிலிருந்து சிலவகை அரசமைப்புகளை படித்தறிந்திருப்பார்கள், தர்க்கவாதத்தினால் ஏற்பட்ட யூகத்தின் அடிப்படையில் இந்த அரசமைப்புகளைப் பற்றி அவர்கள் சிலாகித்துக்கூற முற்படுகிறார்கள், ஓர் அரசில் அனைத்து மக்களும் அல்லது பெரும்பான்மை மக்கள் பொறுப்பு வகித்தார்கள் என்றால் அந்த அரசு ஜனநாயகஅரசு என்று அழைக்கப்படுகிறது. ஓர் அரசு சில மனிதர்களின் கைகளுக்குள் மட்டும் கட்டுண்டு கிடக்குமாயின் அது ஏகாதுபத்தியஅரசு என்று அழைக்கப்படுகிறது. இன்னும் ஓர் அரசில் ஆட்சிஅதிகாரம் ஒருவர் கையில் மட்டும் இருக்கும் நிலையில் மற்றவர்கள் அவரிடமிருந்து அதிகாரத்தை பெறுவார்களாயின் பிறகு அது மன்னராட்சி (monarchy) என்றோ அல்லது அரசகுடும்பத்தின் ஆட்சி(empire of royalty) என்றோ அழைக்கப்படுகிறது, ஆட்சியமைப்பு என்றால் சட்டம்இயற்றுதல் (legislation) மற்றும் ஆட்சிசெய்தல் (ruling) ஆகியவற்றின் அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு என்று பொருளாகும், இந்த இரண்டு அடித்தளங்கள் மீதுதான் ஆட்சியமைப்புகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்துதான் அரசுகளின் வகைகள். கூட்டாட்சி அமைப்புகளின் (federal governments) வகைகள். ஆகியவைகள் உருவாகின்றன, மேலும் இதிலிருந்துதான் அரசாங்க அமைப்புகளின் (government structures) வகைகள். தேர்தல்முறைகள். ஓட்டுரிமை மற்றும் இதுபோன்ற ஆட்சியமைப்பு விவகாரங்கள் அனைத்தும் பிறக்கின்றன.
ஜனநாய சிந்தனை இஸ்லாமிய ஆட்சியமைப்பு சிந்தனையிலிருந்து அடிப்படையிலும் அதன் விரிவாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டது, அவைகளுக்கிடையிலுள்ள வேறுபாடு மிக ஆழமானதாகும் ஏனெனில் இஸ்லாத்தில் உள்ள ஆட்சியமைப்பு கிலா*பத்தாகும், இந்த ஆட்சியமைப்பின் மாதிரி (model) மற்ற எந்தவொரு ஆட்சியமைப்பிலிருந்தும் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது, இந்த ஆட்சிமுறையில் குடிமக்களின் விவகாரங்களை கவனித்துக்கொள்ளுதல் (உள்நாட்டு விவகாரம்) மற்றும் வெளிநாட்டு விவகாரம் ஆகியவற்றின் ஆட்சியமைப்பு அம்சங்களில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் அனைத்தும் ஷரியாவிலிருந்து பெற்ப்பட்டவையாகும், இந்த சட்டங்கள் மக்களிடமிருந்தோ அல்லது ஒருசில அறிவுஜீவிகளிடமிருந்தோ அல்லது எந்தவொரு தனிமனிதரிடமிருந்தோ பெற்பட்டதல்ல, இஸ்லாத்தை தழுவுகின்ற ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய அரபுமொழி அறிவின் அடிப்படையில் ஷரியாவை விளங்கிக்கொள்வதற்கும் ஷரியாஉரை இயம்புவதை புரிந்துகொள்வதற்கும் உரிமையுண்டு, மேலும் அரபு மொழியியல் வரம்புகளுக்கும் ஷரியாவின் வரம்புகளுக்கும் உட்பட்டு அவரது அறிவின் மூலம் ஷரியாஉரையிலிருந்து அவர் விளங்கிக்கொள்வதை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் அவருடைய அபிப்ராயத்தை ஷரியாவின் தீர்ப்பாக ஆக்கிக்கொள்வதற்கும் அவருக்கு பரிபூரணமான உரிமை உண்டு, அதுபோலவே அவர் விளங்கிக்கொண்ட அபிப்ராயத்தை ஷரியாவின் தீர்ப்பாக மற்றவர் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதற்கும் உரிமையுண்டு, அவர் ஒரு ஆட்சியாளராக இருக்கும்பட்சத்தில் இந்த அபிப்ராயத்தின்படி ஆட்சிபுரியவும். அவர் ஒரு நீதிபதியாக இருக்கும்பட்சத்தில் இந்த அபிப்ராயத்தின்படி தீர்ப்பு வழங்கவும் அவருக்கு உரிமையுண்டு, ஆனால் இஸ்லாமிய அரசின் தலைவராக உள்ள கலீ*பா ஏதேனும் ஒரு இஸ்லாமிய அபிப்ராயத்தை ஏற்றுஅமல்படுத்தினால்(adoption of rule) பின்னர் கலீ*பா ஏற்றுஅமல்படுத்தியது மட்டும்தான் இறைசட்டமாக இருக்கும். மேலும் இந்த இறைசட்டங்களை அனைத்து குடிமக்களும் ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டியது அவர்கள் மீது கடமையாகும், இதற்கு அவர்கள் அபிப்ராயங்களை கைவிட்டுவிடுவது என்று பொருளாகாது மாறாக அவர்கள் கலீ*பா ஏற்றுஅமல்படுத்தியுள்ள விதிகளின் வரம்புகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியதும் அதற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டியதும் அவர்கள் மீது சட்டரீதியாக உள்ள கடமையாகும், அதேவேளையில் அவர்கள் தங்கள் அபிப்ராயத்தின்படி மக்களுக்கு கல்வி கற்பிக்கவும் அதனடிப்படையில் மக்களை இஸ்லாத்திற்கு அழைக்கவும் அவர்களுக்கு எந்தவிதமான தடையுமில்லை, இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ள அடித்தளமான இஸ்லாமிய அகீதாவின்(العقيدة الإسلامية) அடிப்படையில் சுதந்திரமாக சிந்தனை மேற்கொள்வதற்கு மக்கள் அனைவருக்கும் பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது, ஆகவே அகீதாவிலிருந்து பிறந்துள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் சட்டம் இயற்றுதல் பற்றியும் சிந்திப்பதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு.
இது சட்டம்இயற்றுதல் மற்றும் சிந்தனை மேற்கொள்ளுதல் ஆகியவற்றைப் பொறுத்து உள்ள நிலையாகும். ஆட்சிபுரிதலைப் பொறுத்தவரை அது சட்டம்இயற்றுதலிருந்து வேறுபட்டது, அதாவது சுல்தான்(அதிகாரம்-السلطان) என்பதும் ஆட்சியமைப்பு (ruling system-نظام الحكم) என்பதும் வெவ்வேறுபட்ட விஷயங்கள், ஆட்சிசெய்யும் அதிகாரம்(சுல்தான்) என்பது இறைசட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகாரமாகும். ஆனால் ஆட்சியமைப்பு என்பது இறைசட்டங்களிலிருந்து உருவாக்கப்படும் செயலாக்கஅமைப்பாகும் نظام)-system), ஆட்சி செய்யும் அதிகாரம் என்பது ஆட்சியமைப்பில் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவிற்கும் அதிலுள்ள ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் ஷரியா வழங்கியுள்ள அதிகாரமாகும், ஆகவே இந்த உரிமையை உம்மாவிலுள்ள அனைவரும் தேவைப்படும்போது பயன்படுத்தலாம், உம்மா பெற்றுள்ள இந்த அதிகாரத்தின் மூலமாக ஷரியாவை நடைமுறைப்படுத்தும் ஒருவரை தன்மீது நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவின் மீதும் தன்னுடைய ஒப்புதல் மற்றும் விருப்பத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பைஅத் செய்து ஒரு கலீ*பாவை நியமனம் செய்துகொள்கிறது, கலீ*பாவுக்கும் உம்மாவுக்கும் இடையில் நிறைவேற்றப்படும் கிலா*பத் ஒப்பந்தம் என்பது ஒரு பணிஒப்பந்தம்(service contruct) அல்ல ஏனெனில் அது ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒப்பந்தமே தவிர உம்மா தனது உலகஆதாயத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தம் கிடையாது, இருந்தபோதிலும் ஷரியாவை நடைமுறைப்படுத்துதல் என்பது உம்மாவின் சேவையோடும் அதன் நலனோடும் தொடர்புடைய விஷயமாகும் ஏனெனில் ஷரியா என்பது உம்மாவிற்கும் மனிதகுலத்திற்கும் அல்லாஹ்(சுபு) புரிந்த அருட்கொடையாகும், எனினும் கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் செயலின் நோக்கம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதாக இருக்கிறதே தவிர உலகஆதாயமாக இல்லை, உடனடியாக உம்மா பெற்றுக்கொள்ளும் உலகஆதாயம் ஷரியாவிற்கு முரண்பாடாக இருக்கும்பட்சத்தில் ஷரியாவை நடைமுறைப்படுத்துவது மட்டுமே கட்டாயமாக கருதப்படும்.
ஆகவே ஒரு இறைசட்டத்தை விட்டுவிடுவதற்கு உம்மா கோரும்பட்சத்தில் அதற்கு ஒப்புக்கொள்வது கலீ*பாவின் கடமையல்ல மாறாக இவ்வாறு உம்மா செயல்படும்போது அது தனது நிலையை மாற்றிக்கொள்ளும்வரை அதனுடன் போர் செய்யவேண்டியது கலீ*பாவின் கடமையாகும், ஏனெனில் அவர் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார், மேலும் தான் விரும்பும்போது கலீ*பாவை பதவிநீக்கம் செய்யும் உரிமையும் உம்மாவிற்கு இல்லை, அவர் இஸ்லாத்திற்கு அந்நியமானவைகளை நடைமுறைப்படுத்தும்போது அவருக்கு எதிராக ஜிஹாது செய்யும் உரிமையும் கடûயும் உம்மாவிற்கு இருக்கிறது என்றபோதும் கலீ*பாவை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஷரியாவிற்கே உரியது, அதாவது சட்டரீதியான முறையில் அவர்மீது உள்ள குற்றச்சாட்டு அநீதிசட்ட நீதிமன்றத்தில் (محكمة المظالم) நிரூபனம் செய்யப்பட்டால் மட்டுமே அவரை பதவிநீக்கம் செய்யமுடியும், ஆகவே கலீ*பாவை உம்மாதான் பதவியில் அமர்த்துகிறது என்றபோதும் அவர் பதவியில் அமர்ந்த பின்னர் அவர் விவகாரம் ஷரியாவின் கையில் இருக்கிறதே தவிர உம்மாவின் கையில் இல்லை.
ஆனால் ஆட்சியமைப்பு அதிகாரத்தில் உள்ள உம்மாவின் உரிமை கலீ*பாவை நியமனம் செய்வதோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக அந்த அதிகாரம் எப்போதுமே உம்மாவின் கையில்தான் இருந்துவரும், கிலா*பத் நிலைநாட்டப்பட்டு கலீ*பா இருக்கும்பட்சத்தில் ஷரியாவை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தும் கடும்பணியையும் உம்மாவின் நலனை பாதுகாக்கும் பொறுப்பையும் அதன் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் கடமையையும் ஷரியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உம்மா தீர்மானிக்கும் முறையில் நிறைவேற்றும் அவரது செயல்பாட்டை தட்டிக்கேட்பது(ஹஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) உம்மா மீதுள்ள கடமையாகவும் உரிமையாகவும் இருக்கிறது, இந்த விவகாரத்தில் உம்மா அவரை தட்டிக்கேட்கும்போது அதற்கு அவர் கட்டுப்படுவதோடு அது ஆட்சேபிக்கும் விவகாரத்தின் சூழலையும் அது எழுப்பியுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வையும் அதனிடம் விளக்கிக் கூறவேண்டியது அவரது கடமையாகும், அவருக்கு எதிராக அது ஆயுதத்தை ஏந்தியபோதும் உம்மா கொண்டுள்ள ஆட்சேபனைகளையும் அதன் சந்தேகங்களையும் அகற்றும் வகையில் முறையான விளக்கத்தை அளிக்காதவரை அதற்கு எதிராக ஆயுதமேந்த அவருக்கு அனுமதியில்லை.
இதுதான் இஸ்லாத்திலுள்ள ஆட்சிமுறையாகும். இந்த அடிப்படை மீதுதான் ஆட்சியமைப்பு நிறுவப்பட்டுள்ளது, இந்த ஆட்சிமுறையை அமல்படுத்தும்போது அது கிலா*பத் என்ற இஸ்லாத்தின் ஆட்சியமைப்பாக இருக்குமே ஒழிய வேறெந்த ஆட்சிமுறையாகவும் இருக்காது, இந்த ஆட்சியமைப்பு ஒருமைத்துவம் கொண்ட ஆட்சியமைப்பாக(unitary system-نظام الوحدة) இருக்குமே தவிர யூனியன் ஆட்சியமைப்பாகவோ அல்லது கூட்டாட்சி அமைப்பாகவோ (union or federal system) இருக்காது, மேலும் கிலா*பத் ஆட்சியமைப்பில் அரசாங்க அமைப்பு (government structure) எதுவும் கிடையாது, கலீ*பாதான் இஸ்லாமிய அரசாக இருக்கிறார் அவரின்றி இஸ்லாமிய அரசு என்ற ஒன்று கிடையாது, ஆகவே அரசு(state) என்பதும் அரசாங்கம்(government) என்பதும் கலீ*பா மற்றும் அவரது உதவியாளர்கள்(المعاونون) என்ற ஒரே அமைப்பாகவே(single body) இருக்கும், கலீ*பாவை நியமனம் செய்யும் வழிமுறை. கலீ*பாவை தேர்வுசெய்வதில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதல் மற்றும் விருப்பத்தேர்வு ஆகியவை இணைந்திருக்கும் விதத்தில் பைஅத்தை நிறைவேற்றும் நடைமுறை. ஆகிய அனைத்து விஷயங்களும் கிலா*பத்திற்குரிய தனிப்பட்ட இறைசட்டங்களிலிருந்தும் ஒப்பந்தத்திற்குரிய பொதுவான இறைசட்டங்களிலிருந்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன, சுததந்திர தேர்வுமுறை. அனைவரும் தங்கள் அபிப்ராயத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய கண்ணோட்டதில் கிலா*பத் ஆட்சிமுறையும் ஜனநாயக ஆட்சிமுறையும் ஒன்றுபோல தோன்றினாலும் இந்த இரண்டு ஆட்சிமுறைகளும் ஒன்றுதான் என்று கருதுவது தவறானதாகும் ஏனெனில் ஜனநாயக ஆட்சிமுறையில் இந்த விஷயங்கள் சுதந்திர உரிமைகள்(freedom of rights) என்ற மனித அறிவிலிருந்து தோன்றிய கொள்கையிலிருந்து உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் கிலா*பத் ஆட்சிமுறையில் இவைகள் ஷரியாவிலிருந்து பெறப்பட்ட இறை சட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன, ஏனெனில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலும் விருப்பமும் தேர்வில் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது கிலா*பத் ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனை என்றும் இது நிறைவேற்றப்படா விட்டால் தேர்வுசெய்யப்படும் நபர் சட்டரீதியாக கலீ*பா பதவியை ஏற்கமுடியாது என்றும் ஷரியா விதித்திருக்கிறது.
தேர்வில் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும் என்பதற்கும் ஆட்சிக்குரிய ஒப்பந்தத்தில் மக்களின் ஒப்புதலும் விருப்பத்தேர்வும் கட்டாயம் பெறப்படவேண்டும் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது, முந்தய விஷயத்தில் சுதந்திரத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதை மக்கள் முடிவுசெய்கிறார்கள், ஆகவே ஜனநாயகஆட்சி முறையில் பரிந்துரைக்கப்படும் இந்த சுதத்திரதேர்வு என்பது நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும் தேர்வு சட்ட ரீதியானதாகவே கருதப்படும், ஆனால் கிலா*பத் ஆட்சிமுறையில் மக்களின் ஒப்புதலும் விருப்பமும் கட்டாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பது மக்கள் ஏற்படுத்திய சட்டமாக இல்லை மாறாக அது இறைசட்டமாக இருப்பதால் அது நிறைவேற்றப்படவில்லை என்றால் தேர்வும் நடைபெறாது ஆட்சிக்குரிய ஒப்பந்தமும் நிறைவேற்றப்படாது, கிலா*பத் ஆட்சிறை மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை ஆகியவை ஏகாதிபத்திய ஆட்சிமுறை அல்லது மன்னராட்சிமுறை அல்லது இராணுவ ஆட்சிமுறை அல்லது ராஜகுடும்ப ஆட்சிமுறை(empire of royalty) ஆகிய ஆட்சிமுறைகளிலிருந்து வேறுபட்டது என்றபோதும் இவ்விரண்டு ஆட்சிமுறையின் அடித்தளத்திலுள்ள சிந்தனைகள் முற்றிலும் வேறானவை, ஆகவே இஸ்லாமிய ஆட்சியமைப்பில் இடம் பெற்றுள்ள சிந்தனைகள் பற்றி ஆய்வுசெய்ய வேண்டுமானால் அது மற்ற ஆட்சிமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஆட்சிமுறை என்ற அந்தஸ்த்தில் அதை ஆய்வுசெய்யவேண்டும், மேலும் அது எதார்த்த உண்மைகளுக்கு இணக்கமாக இருப்பதைக் குறித்து ஆய்வுசெய்யவேண்டுமே ஒழிய மற்ற ஆட்சியமைப்புடன் அதை ஒப்புநோக்கக்கூடாது, மற்ற ஆட்சிமுறைகள் குறித்து ஆய்வுசெய்யும்போது அவை எதார்த்த உண்மைகளுக்கு இணக்கமாக இருக்கிறதா? என்பது குறித்தும். மனிதகுலத்தை உண்மையாக மனிதன் ஆட்சிசெய்வது சாத்தியமா? என்பது குறித்தும். அவ்வாறு ஆட்சிசெய்யும் பட்சத்தில் அதில் உயர்ந்த மாண்புகள் இடம்பெறுமா? என்பது குறித்தும். இந்த ஆட்சியமைப்புகளிலுள்ள சிந்தனைகளுக்கு மனிதர்களை படைத்து பரிபாலிக்கும் இறைவனான அல்லாஹ்(சுபு) விடமிருந்துள்ள ஷரியா ஆதாரம் (divine evidence) இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வுசெய்யவேண்டும்.
இதனடிப்படையில். மற்ற ஆட்சியமைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட. முன்மாதிரியற்ற. தனித்துவம் பெற்ற ஆட்சியமைப்பு என்ற அந்தஸ்த்தில் கிலா*பத்தை ஆய்வுசெய்யவேண்டும் என்று வாசகர்களிடம் கோரிக்கை வைக்கிறோம், மேலும் தற்போது மனிதகுலத்தை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ஆட்சியமைப்போடு ஒப்பிடும்போது அது மிஉயர்ந்த அந்தஸ்த்து பெற்றுள்ளது என்பதையும். அல்லாஹ்(சுபு) வின் வேதத்திலிருந்தும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவிலிருந்தும் பிறந்த இந்த ஆட்சியமைப்பு அது உருவான அடிப்படைக்கு முற்றிலும் இணக்கமாக இருக்கிறது என்பதையும். அதில் இடம்பெற்றுள்ள சிந்தனைகள் சரியானவை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எதார்த்த உண்மைகளை(reality-الواقع) ஆதாரமாகவும் அளவுகோலாகவும் வைத்து இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.