Tuesday, October 30, 2012

முற்றுப் பெறாதது சாத்தானின் தூதே ... கஸ்தூரியை சுமந்தவர்கள் குப்ரிய சாக்கடையில் சுகந்தம் தேடி புறண்டதனால் தூய இலட்சியங்கள் நாறிப்போக இரத்தமும் சதைகளும் உணர்வுகளும் உரிமைகளும் அற்பமென்றாகி அவல ஊர்வலங்கள் இந்த உம்மாவின் வீதிகளில் வலம் வரத் தொடங்கின ! கலங்கரை விளக்குகள் குட்டிச் சுவர்களுக்குள் சுயநல வாழ்க்கை தொடரக் கற்றுக்கொண்டதால் தான் அதற்காகவே காத்திருந்த ஓநாய்கள் சாவகாசமாக முற்றுகையிட்டு எம் நிலங்களிலேயே முகாமிட்டு விஷப்பற்களை பதிக்கத் தொடங்கின ! இன்று ஜாஹிலீய சத்துருக்களின் அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள் 'அல்ல , 'கிங் ஜோக்கர்கள்'! அல்லாஹ்வின் அமானிதத்தை அலட்சியம் செய்துவிட்டு அசத்திய' பொலிடிக்ஸில்' நவீனம் காண்கிறோம் ! இது அநாகரீக மேடையில் நாகரிக நடனமாம் ! 'ஹராத்தில் ' மூழ்கி 'ஹலாலை ' தேடுவது அற்புதக்கலை என்பது அல்லாஹ்வுக்கே(சுப) தெரியாதது !!! அவனின் தூதர் (ஸல் ) அவர்களுக்கோ புரியாதது !!! அதிசயமான இந்த வஹிப்பிரதி, மக்கியா ? மதனியா? 'ஹிராவில்' தொடங்கி' ஹஜ்ஜதுல்விதாவரை' இல்லவே இல்லை. சத்தியத்தின் தூதுக்குத்தான் பூர்த்தி நடந்து விட்டதே !! ஆனால் சாத்தானின் தூதுக்குத் தான் பூர்த்தியே இல்லையே ! ஒருவேளை இந்த நூற்றாண்டின்? சதிப்பிரதி 'சியோனிச 'அருளால் 'பென்டகனில் ' இறங்கி 'வைட் ஹவுஸ் ' மொழியால் அரேபிய நுழைந்திருக்கலாம் !!

Wednesday, January 25, 2012

தேசியவாதம்

கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.

தேசியவாதம் இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும். இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை து}க்கியது. இதன் வெற்றுக்கோசங்களினால் முஸ்லிம்கள் கவரப்பட்டிருந்த போதிலும் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசியவாதக் கருத்திற்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்களின் விடுதலைக்கான சரியான வழியை இஸ்லாத்திலிருந்து தேட ஆரம்பித்தனர்.

ஓரு தேசத்தின் சிந்தனைத்தரம் நலிவடைகின்ற போது அத்தேசத்தில் தரமற்ற வாழ்க்கை பிணைப்புகளும் (bonds) சமூகப் பெறுமானங்களும் (values) தலை து}க்குகின்றன. இந்த வாழ்க்கை பிணைப்புகள் உயிர் வாழ்தல் என்ற உணர்வை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாகவும் விலங்குகளில் காணப்படுகின்ற வாழ்க்கை பிணைப்புகளை ஒத்ததாகவும் காணப்படுகின்றன. இவை வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதும் அடிக்கடி மாறக்கூடியதும் நிலையற்றதுமாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு தேசத்தின் மீது வெளிநாட்டு அக்கிரமிப்பு இருக்கின்ற போது அதிகமாகக் காணப்படுகின்ற இந்த வாழ்க்கை பிணைப்புகள் சமாதான காலங்களின்போது உணரப்படுவதில்லை. இவற்றில் மிகப்பிரதானமானவை தேசப்பற்றும் தேசியவாதமும் ஆகும்.

தேசப்பற்று என்பது ஒரு நிலப்பிரதேசத்தையும் அங்கு வசிக்கின்ற மக்களையும் இணைக்கின்ற ஒரு பிணைப்பு ஆகும். அதேபோல் தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும். ஒரு மனிதன் தனது ஆதிக்கத்தை தனது குடும்பம் அயலவர்கள் பின்னர் ஒரு பாரிய பிரதேசத்தவர்கள் என்று விரிவு படுத்துகின்றபோது தேசியவாதம் தலை து}க்குகின்றது. ஆதிக்க உணர்வு என்பது ஆதிக்கம் செலுத்தப்படுகின்றவர்களுக்கு மத்தியிலும் காணப்படும் ஒரு உணர்வு என்பதால் இது எப்பொழுதும் முரண்பாடுகளுக்கும் போராட்டங்களுக்குமே வழிகோலுகின்றது. எனவே இந்த வாழ்க்கைப்பிணைப்பு (தேசியவாதம்) மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும்.

அதுமட்டுமல்லாது தேசியவாதம் மனிதவாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒரு வாழ்க்கை முறையையும் (ideology) மனிதர்களுக்கு வழங்குவதில்லை. எனவேதான் தேசிய சமத்துவம் (socialism) மற்றும் தேசிய முதலாளித்துவம் என்பவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஒரு சமுகத்தில் காணப்படவேண்டிய சரியான வாழ்க்கை பிணைப்பு வெறும் உணர்ச்சிகளை மாத்திரம் அடிப்படையாக கொண்டிராமல் அறிவார்ந்த அடிப்படையில் இருக்க வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு என்பது அல்லாஹ்(சுபு)விடம் இருந்து இறக்கப்பட்டதும், அறிவார்ந்த அடிப்படையைக் கொண்டதும், சரியானதும் ஆகும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு நிறுவப்படுகின்ற போது இரத்தம், பிரதேசம் அல்லது ஆதிக்க உணர்வு என்பவற்றை அடிப்படடையாகக் கொண்ட பிழையான வாழ்க்கை பிணைப்புகள் அகற்றப்பட்டு விடுகின்றன. அல்லாஹ் திருக் குர்ஆனிலே கூறுகின்றான்.

“கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும், ஆண் மக்களும், சகோதரர்களும், மனைவியரும், குடும்பத்தினரும், சம்பாத்தியங்களும், நீங்கள் நஷ்டத்தைப் பயப்படுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகின்ற வீடுகளும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், அவனுடைய பாதையில் போர் செய்வதையம் விட உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் அப்போது நீங்கள் (தண்டனையைப்பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும் பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவும் மாட்டான்.” (9-24)

இஸ்லாம் மாத்திரமே மனித இனத்திற்கான ஒரேயொரு சரியான வாழ்க்கைத்திட்டம். சோசலிஸம், முதலாளித்துவம் அனைத்துமே பிழையான வாழ்க்கைத்திட்டங்களே ஆகும். இரத்தப்பிணைப்பு பிரதேசப்பிணைப்பு போன்றவற்றிலிருந்து மனிதனுக்கு விடுதலையளிப்பதன் முலம் அவனுடைய அந்தஸ்தை உயர்த்துவதற்காகவே இஸ்லாம் இறக்கப்பட்டது. ஓரு முஸ்லிம் எந்தத் தேசத்தைக் கொண்டும் அடையாளம் காணப்படுவதில்லை. இறைசட்டம் (ஷரீஆ) அமுல்படுத்தப் படுகின்ற நிலம் மாத்திரமே ஒரு முஸ்லிமுக்குரிய தேசம். இஸ்லாமிய நம்பிக்கையைக்கொண்டு மாத்திரமே அவன் அடையாளம் காணப்படுவான். ஓரு முஸ்லிமின் சொந்தக்காரர்கள் இறை விசுவாசம் கொண்டவர்கள் மாத்திரமே. எனவே ஓரு முஸ்லிமுக்கு தாய் சகோதரர்கள் மனைவியர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களிடம் கூட எந்த உறவும் கிடையாது, அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. எனவே இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையிலே முஸ்லிம்கள் எல்லோரும் இணைக்கப்படுவார்கள்.

“மனிதர்களே நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான். இன்னும் அவ்விருவரிலிருந்தும் அனேக ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். நீங்கள் எவனைக்கொண்டு உங்களுக்குரிய உரிமைகளைக் கேட்டுக்கொள்கின்றீர்களோ அவனையும் இரத்த சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” (4-1)

“நபியே உமதிரட்சகன் அவனைத்தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக்கூடாதென்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவருக்கும் ‘சீ’ என்று கூட சொல்ல வேண்டாம். அவ்விருவரையம் விரட்டி விடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக” (17-23)

இந்தக் குர்ஆன் வசனங்களின் விளக்கம் என்னவென்றால் ஒரு முஸ்லிமுக்கு தன் பெற்றோர் மீது அன்பு காட்டுவது அவசியமானதுதான். என்றாலும் இஸ்லாத்தின் விரோதிகளுடன் அவர்கள் வெளிப்படையான தொடர்பை வைத்திருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமிடையில் எந்த உறவும் கிடையாது. அவர்களின் மீது அன்பு காட்டவேண்டிய அவசியமும் கிடையாது.

அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸைத் அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உபை (ரலி) அவர்களை அழைத்துக்கேட்டார்கள்- “உங்களின் தந்தை என்ன கூறினார் என்று தெரியுமா?" அப்துல்லாஹ் (ரலி) கேட்டார்கள் “எனது பெற்றோர் உங்களுக்குக் காணிக்கையாகட்டும். எனது தந்தை என்ன கூறினார்?" அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள்." அதற்கு அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள் “இறை தூதரே அல்லாஹ் மீது சத்தியமாக அவர் உண்மையையே கூறினார். நீங்கள்தான் கண்ணியத்திற்குரியவர். அவர்தான் வெறுக்கப்படுபவர். “இறை தூதரே நீங்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்பு என்னை விடவும் தந்தைக்கு அதிகமான கீழ்ப்படிவு உள்ளவர் வேறு எவருமில்லை என்பதை மதீனாவாசிகள் அறிவார்கள். ஆனால் இப்பொது அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் விரும்பினால் நான் அவருடைய தலையைத் துண்டாடுவேன்." எனக்கூறினார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்கள் மறுப்புத்தெரிவித்தார்கள்.

முஸ்லிம்கள் மதீனாவிற்குத்திரும்பிய போது மதீனா வாசலிலே தனது தந்தையைத் தடுத்து நிறுத்திய அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் தமது வாளை உருவி தந்தையின் தலைக்கு மேல் பிடித்தவர்களாகக் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள் என்று கூறினீர்களா? கண்ணியம் இறை து}தருக்குரியதா அல்லது உமக்குரியதா? என்பதை நீங்கள் இப்போது விளங்கிக் கொள்வீர்கள். அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் அனுமதி தரும் வரை சத்தியமாக நான் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கவும் மாட்டேன் அடைக்கலம் தரவும்மாட்டேன்" இதனைக்கேட்ட இப்னு உபை இரு முறை சப்தமிட்டுக் கூறினார்கள், ஹஸ்ரஜ் கூட்டத்தினரே எனது மகன் எனது வீட்டை விட்டும் என்னைத் தடுப்பதைப்பாருங்கள்." எத்தனையோ ஸஹாபாக்கள் கெஞ்சிக்கேட்டும் கூட அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இந்தச்செய்தி முஹம்மத்(ஸல்) அவர்களின் காதுகளை எட்டியது. கடைசியாக இப்னு உபையை அனுமதிக்கும்படி முஹம்மத்(ஸல்) அவர்களிடமிருந்து உத்தரவு வந்ததன் பின்னரே “நபி(ஸல்) அவர்களிடமிருந்து அனுமதி வந்திருப்பதால் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கின்றேன்" என்று கூறி தமது தந்தையை மதீனாவிற்குள் அனுமதித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் மாமா அபு லஹப் தங்கள் சகோதரர் அபு ஜஹ்ல் போன்றவர்களின் இரத்த உறவைத் துண்டித்திருந்தமையும், அரேபியாவைச் சேர்ந்த முஹம்மத்(ஸல்) ரோமைச் சேர்ந்த சுஹைல் அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால் பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான் போன்றவர்கள் சகோதரர்களாக இருந்தமையும் வெளிப்படையான உண்மைகளாகும்.
ஓ முஸ்லீம்களே! ஈமானியக் கொடியின் கீழ் மாத்திரமே வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எமது போராட்டத்தின் இலக்கு இறை திருப்தியும் அல்லாஹ்வினுடைய சட்டங்களை நிலை நாட்டுவதும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதும் மாத்திரம் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நமது போராட்டத்தின் இலக்கு சொத்துக்காக புகழோ நாட்டின் பெருமையோ இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

அபு முஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் - “ஒரு மனிதர் சொத்துக்காகப் போராடுகின்றார் இன்னும் ஒருவர் புகழுக்காகப் போராடுகின்றார் இவர்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் யார்?" இதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வின் சட்டங்களை உயர்வு பெறச் செய்வதற்காகப் போராடுபவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்"

அல்லாஹ் கூறுகின்றான்

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது து}தரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்;. மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.”(58:22)

“நபி இப்றாஹீமிலும் அவருடன் இருந்தவர்களிலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் தம் சமுகத்தாரிடம் கூறினார்கள் - நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி உங்களை நிராகரித்து விட்டோம். இன்னும் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசங் கொள்ளும் வரை உங்களுக்கும் எங்களுக்கம் இடையில் விரோதமும் வெறுப்பும் என்றென்றும் வெளிப்பட்டுவிட்டது.” ( 60-4)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.”


எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்.

Thursday, October 13, 2011

மாற்றம் தேடும் வழி முறைகள்


'ஷஹாதத் கலிமா'வைச் சுமந்த முன்னோர்,
அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.
சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,
சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம்.


குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,
குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,
குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,
குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்!


முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,
சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,
இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,
ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.


பூரண இஸ்லாத்தில் நுழைந்த முன்னோர்,
பாரெங்கும் பங்காற்றி சாதனைகள் புரிந்தார்கள்.
பாதி இஸ்லாத்தையும் புரியாத நாம்,
பாதையைக் காட்டும் குருடனாய் அலைகின்றோம்.


ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக் கென்றோர்,
அழைப்பாலும் அறப் போராலும் கண்டங்களை வென்றார்கள்,
ஆட்சி யதிகாரத்தை மனிதனுக்குத் தந்து,
எம் தேசங்களிலேயே சிறைப்படுத்தப் படுகின்றோம்.


ஒரு 'உம்மத்;' ஒரு 'கிலாபத்' கோட்பாட்டை
ஒரு கணமும் மறந்ததில்;லை முன்னோர்கள்.
'பிளவே எம் பாதை', 'பிரிவினையே எம் வேதம்' என்று
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக்கியது நம்மவர்கள்.


இறை சட்டங்களால் ஆளப்பட்டதைத் தான்,
'இகாமதுத் தீன்' என்றார்கள்,
விஷத்தில் சிறிது பாலிருந்தாலும்,
வாழும் மனிதனுக்கு தீர்வென்கிறோம் நாம்.


கொள்கைத் தெளிவோடும் தெளிவான வழியோடும்
அழைப்புப் பணிக்கு அழகு சேர்த்தார்கள்.
மயக்கமான கொள்கையோடும் மாறும் வழிமுறைகளோடும்,
முழு மனித வீழ்ச்சியின் கர்த்தாக்கள் ஆனோமே!


சுவனத்தை நாடியும் கோட்பாட்டை மதித்தும்
கட்டுப்பட்ட முன்மாதிரிப் படையே முன்னோர்கள்.
ஆட்களை மகிழ்வூட்டி உலகை அடைவதற்காய்,
கூலிக்கு மாரடிக்கும் ஊதியப் படையே நம்மவர்கள்.


மக்களே!
அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக் கொள்வோமே.
நம் முன்னோரின் வழியில் முன்னேறிச் செல்வோமே!
செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருப்போமே!
இறை கலிமாவை உலகெங்கும் ஓங்கச் செய்வோமே!


மக்களே
சம்பூரண இஸ்லாத்தை ஏற்கத் தயங்காதீர்!
'ஷரீஅத்'தில்லா ஆட்சிக்கு வாக்கைத் தராதீர்!
'கிலாபத்' தானாய் வருமென்று தட்டிக் கழிக்காதீர்!
'மஹ்தி' மீட்கட்டுமே யென்று முடங்கிக் கிடக்காதீர்!


மக்களே!
நபி தந்த வழி முறையை பற்றிக் கொள்ளுங்கள்!
'இறையாட்சி தான் தீர்வென்று உரத்துக் சொல்லுங்கள்!
படையின் உதவியோடு தீனை நிலை நாட்டுங்கள்!
நபி வழி கிலாபத்தை மீண்டுமாய்க் கட்டி எழுப்புங்கள்!

Sunday, August 14, 2011

தேசியவாதம்

கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.

தேசியவாதம் இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும். இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை து}க்கியது. இதன் வெற்றுக்கோசங்களினால் முஸ்லிம்கள் கவரப்பட்டிருந்த போதிலும் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசியவாதக் கருத்திற்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்களின் விடுதலைக்கான சரியான வழியை இஸ்லாத்திலிருந்து தேட ஆரம்பித்தனர்.

ஓரு தேசத்தின் சிந்தனைத்தரம் நலிவடைகின்ற போது அத்தேசத்தில் தரமற்ற வாழ்க்கை பிணைப்புகளும் (bonds) சமூகப் பெறுமானங்களும் (values) தலை து}க்குகின்றன. இந்த வாழ்க்கை பிணைப்புகள் உயிர் வாழ்தல் என்ற உணர்வை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாகவும் விலங்குகளில் காணப்படுகின்ற வாழ்க்கை பிணைப்புகளை ஒத்ததாகவும் காணப்படுகின்றன. இவை வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதும் அடிக்கடி மாறக்கூடியதும் நிலையற்றதுமாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு தேசத்தின் மீது வெளிநாட்டு அக்கிரமிப்பு இருக்கின்ற போது அதிகமாகக் காணப்படுகின்ற இந்த வாழ்க்கை பிணைப்புகள் சமாதான காலங்களின்போது உணரப்படுவதில்லை. இவற்றில் மிகப்பிரதானமானவை தேசப்பற்றும் தேசியவாதமும் ஆகும்.

தேசப்பற்று என்பது ஒரு நிலப்பிரதேசத்தையும் அங்கு வசிக்கின்ற மக்களையும் இணைக்கின்ற ஒரு பிணைப்பு ஆகும். அதேபோல் தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும். ஒரு மனிதன் தனது ஆதிக்கத்தை தனது குடும்பம் அயலவர்கள் பின்னர் ஒரு பாரிய பிரதேசத்தவர்கள் என்று விரிவு படுத்துகின்றபோது தேசியவாதம் தலை து}க்குகின்றது. ஆதிக்க உணர்வு என்பது ஆதிக்கம் செலுத்தப்படுகின்றவர்களுக்கு மத்தியிலும் காணப்படும் ஒரு உணர்வு என்பதால் இது எப்பொழுதும் முரண்பாடுகளுக்கும் போராட்டங்களுக்குமே வழிகோலுகின்றது. எனவே இந்த வாழ்க்கைப்பிணைப்பு (தேசியவாதம்) மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும்.

அதுமட்டுமல்லாது தேசியவாதம் மனிதவாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒரு வாழ்க்கை முறையையும் (ideology) மனிதர்களுக்கு வழங்குவதில்லை. எனவேதான் தேசிய சமத்துவம் (socialism) மற்றும் தேசிய முதலாளித்துவம் என்பவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஒரு சமுகத்தில் காணப்படவேண்டிய சரியான வாழ்க்கை பிணைப்பு வெறும் உணர்ச்சிகளை மாத்திரம் அடிப்படையாக கொண்டிராமல் அறிவார்ந்த அடிப்படையில் இருக்க வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு என்பது அல்லாஹ்(சுபு)விடம் இருந்து இறக்கப்பட்டதும், அறிவார்ந்த அடிப்படையைக் கொண்டதும், சரியானதும் ஆகும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு நிறுவப்படுகின்ற போது இரத்தம், பிரதேசம் அல்லது ஆதிக்க உணர்வு என்பவற்றை அடிப்படடையாகக் கொண்ட பிழையான வாழ்க்கை பிணைப்புகள் அகற்றப்பட்டு விடுகின்றன. அல்லாஹ் திருக் குர்ஆனிலே கூறுகின்றான்.

“கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும், ஆண் மக்களும், சகோதரர்களும், மனைவியரும், குடும்பத்தினரும், சம்பாத்தியங்களும், நீங்கள் நஷ்டத்தைப் பயப்படுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகின்ற வீடுகளும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், அவனுடைய பாதையில் போர் செய்வதையம் விட உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் அப்போது நீங்கள் (தண்டனையைப்பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும் பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவும் மாட்டான்.” (9-24)

இஸ்லாம் மாத்திரமே மனித இனத்திற்கான ஒரேயொரு சரியான வாழ்க்கைத்திட்டம். சோசலிஸம், முதலாளித்துவம் அனைத்துமே பிழையான வாழ்க்கைத்திட்டங்களே ஆகும். இரத்தப்பிணைப்பு பிரதேசப்பிணைப்பு போன்றவற்றிலிருந்து மனிதனுக்கு விடுதலையளிப்பதன் முலம் அவனுடைய அந்தஸ்தை உயர்த்துவதற்காகவே இஸ்லாம் இறக்கப்பட்டது. ஓரு முஸ்லிம் எந்தத் தேசத்தைக் கொண்டும் அடையாளம் காணப்படுவதில்லை. இறைசட்டம் (ஷரீஆ) அமுல்படுத்தப் படுகின்ற நிலம் மாத்திரமே ஒரு முஸ்லிமுக்குரிய தேசம். இஸ்லாமிய நம்பிக்கையைக்கொண்டு மாத்திரமே அவன் அடையாளம் காணப்படுவான். ஓரு முஸ்லிமின் சொந்தக்காரர்கள் இறை விசுவாசம் கொண்டவர்கள் மாத்திரமே. எனவே ஓரு முஸ்லிமுக்கு தாய் சகோதரர்கள் மனைவியர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களிடம் கூட எந்த உறவும் கிடையாது, அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. எனவே இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையிலே முஸ்லிம்கள் எல்லோரும் இணைக்கப்படுவார்கள்.

“மனிதர்களே நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான். இன்னும் அவ்விருவரிலிருந்தும் அனேக ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். நீங்கள் எவனைக்கொண்டு உங்களுக்குரிய உரிமைகளைக் கேட்டுக்கொள்கின்றீர்களோ அவனையும் இரத்த சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” (4-1)

“நபியே உமதிரட்சகன் அவனைத்தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக்கூடாதென்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவருக்கும் ‘சீ’ என்று கூட சொல்ல வேண்டாம். அவ்விருவரையம் விரட்டி விடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக” (17-23)

இந்தக் குர்ஆன் வசனங்களின் விளக்கம் என்னவென்றால் ஒரு முஸ்லிமுக்கு தன் பெற்றோர் மீது அன்பு காட்டுவது அவசியமானதுதான். என்றாலும் இஸ்லாத்தின் விரோதிகளுடன் அவர்கள் வெளிப்படையான தொடர்பை வைத்திருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமிடையில் எந்த உறவும் கிடையாது. அவர்களின் மீது அன்பு காட்டவேண்டிய அவசியமும் கிடையாது.

அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸைத் அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உபை (ரலி) அவர்களை அழைத்துக்கேட்டார்கள்- “உங்களின் தந்தை என்ன கூறினார் என்று தெரியுமா?" அப்துல்லாஹ் (ரலி) கேட்டார்கள் “எனது பெற்றோர் உங்களுக்குக் காணிக்கையாகட்டும். எனது தந்தை என்ன கூறினார்?" அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள்." அதற்கு அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள் “இறை தூதரே அல்லாஹ் மீது சத்தியமாக அவர் உண்மையையே கூறினார். நீங்கள்தான் கண்ணியத்திற்குரியவர். அவர்தான் வெறுக்கப்படுபவர். “இறை தூதரே நீங்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்பு என்னை விடவும் தந்தைக்கு அதிகமான கீழ்ப்படிவு உள்ளவர் வேறு எவருமில்லை என்பதை மதீனாவாசிகள் அறிவார்கள். ஆனால் இப்பொது அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் விரும்பினால் நான் அவருடைய தலையைத் துண்டாடுவேன்." எனக்கூறினார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்கள் மறுப்புத்தெரிவித்தார்கள்.

முஸ்லிம்கள் மதீனாவிற்குத்திரும்பிய போது மதீனா வாசலிலே தனது தந்தையைத் தடுத்து நிறுத்திய அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் தமது வாளை உருவி தந்தையின் தலைக்கு மேல் பிடித்தவர்களாகக் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள் என்று கூறினீர்களா? கண்ணியம் இறை து}தருக்குரியதா அல்லது உமக்குரியதா? என்பதை நீங்கள் இப்போது விளங்கிக் கொள்வீர்கள். அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் அனுமதி தரும் வரை சத்தியமாக நான் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கவும் மாட்டேன் அடைக்கலம் தரவும்மாட்டேன்" இதனைக்கேட்ட இப்னு உபை இரு முறை சப்தமிட்டுக் கூறினார்கள், ஹஸ்ரஜ் கூட்டத்தினரே எனது மகன் எனது வீட்டை விட்டும் என்னைத் தடுப்பதைப்பாருங்கள்." எத்தனையோ ஸஹாபாக்கள் கெஞ்சிக்கேட்டும் கூட அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இந்தச்செய்தி முஹம்மத்(ஸல்) அவர்களின் காதுகளை எட்டியது. கடைசியாக இப்னு உபையை அனுமதிக்கும்படி முஹம்மத்(ஸல்) அவர்களிடமிருந்து உத்தரவு வந்ததன் பின்னரே “நபி(ஸல்) அவர்களிடமிருந்து அனுமதி வந்திருப்பதால் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கின்றேன்" என்று கூறி தமது தந்தையை மதீனாவிற்குள் அனுமதித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் மாமா அபு லஹப் தங்கள் சகோதரர் அபு ஜஹ்ல் போன்றவர்களின் இரத்த உறவைத் துண்டித்திருந்தமையும், அரேபியாவைச் சேர்ந்த முஹம்மத்(ஸல்) ரோமைச் சேர்ந்த சுஹைல் அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால் பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான் போன்றவர்கள் சகோதரர்களாக இருந்தமையும் வெளிப்படையான உண்மைகளாகும்.
ஓ முஸ்லீம்களே! ஈமானியக் கொடியின் கீழ் மாத்திரமே வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எமது போராட்டத்தின் இலக்கு இறை திருப்தியும் அல்லாஹ்வினுடைய சட்டங்களை நிலை நாட்டுவதும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதும் மாத்திரம் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நமது போராட்டத்தின் இலக்கு சொத்துக்காக புகழோ நாட்டின் பெருமையோ இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

அபு முஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் - “ஒரு மனிதர் சொத்துக்காகப் போராடுகின்றார் இன்னும் ஒருவர் புகழுக்காகப் போராடுகின்றார் இவர்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் யார்?" இதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வின் சட்டங்களை உயர்வு பெறச் செய்வதற்காகப் போராடுபவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்"

அல்லாஹ் கூறுகின்றான்

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது து}தரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்;. மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.”(58:22)

“நபி இப்றாஹீமிலும் அவருடன் இருந்தவர்களிலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் தம் சமுகத்தாரிடம் கூறினார்கள் - நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி உங்களை நிராகரித்து விட்டோம். இன்னும் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசங் கொள்ளும் வரை உங்களுக்கும் எங்களுக்கம் இடையில் விரோதமும் வெறுப்பும் என்றென்றும் வெளிப்பட்டுவிட்டது.” ( 60-4)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.”


எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்.

Monday, August 1, 2011

Ramadhan Message from Abdul Wahid, Chairman Hizb ut-Tahrir Britain


ramadan-2011

As we welcome the blessed month of Ramadhan, increasing our ibadat , we pray for an end to the bloodshed, chaos, oppression, corruption and hardship that plague this Ummah.

Asalamu alaikum and Ramadhan Kareem to all our site visitors

Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! Once again Allah Ta’ala has blessed us with a chance to enjoy this most special of months.

Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! Allah has multiplied the rewards and chained the shayateen.

Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! He SWT has united us in fasting, and breaking our fast and standing in prayer.

There are so many blessings for this Ummah to be grateful for and we thank Him for these.

This year, like other years, we pray for an end to the bloodshed, chaos, oppression, corruption and hardship that plague this Ummah.

But this Ramadhan we have cause to give more thanks to Allah Ta’ala.

For He SWT has removed the fear from the hearts of the people – fear instilled by regimes that have plagued Muslim lands for decades.

Muslims have been rising up to oppose these regimes and calling for real change for 8 months. Real change has not occurred but there is no sign that the call has stopped.

The challenge for Muslims this Ramadhan as they meet and pray together is to have an alternative vision to the existing systems in the Muslim world that keep people in poverty and allowed the resources of the Muslim world to be exploited by colonial powers.

This alternative vision should not just be an alternative to oppressive dictatorship and corrupt democracy. It should be an alternative to the failing capitalist secular models in the west – where the banks went bust, politicians are corrupt and media makes money from gossip, slander and innuendo.

The alternative vision should be based on Islam. Allah SWT said

The month of Ramadan in which was revealed the Qur’an, a guidance for mankind, and clear proofs of the guidance, and the Criterion (of right and wrong). And whosoever of you is present, let him fast the month, and whosoever of you is sick or on a journey, (let him fast the same) number of other days. Allah desireth for you ease; He desireth not hardship for you; and (He desireth) that ye should complete the period, and that ye should magnify Allah for having guided you, and that peradventure ye may be thankful. [Al-Baqra:185]

The Quran revealed in this month, and recited in this month was revealed to be implemented – a criterion and standard for people to live by – to lead mankind out of darkness into light.

So, as we stand in prayer and hear the sublime ayaat-kareem being recited we should reflect that the Muslim world needs the systems that emerged from this Book and work to convince people to focus their call on this Islamic alternative.

We pray Allah accepts all our siyaam, qiyaam, sadaqaat, du’a and good deeds in this month, and unites and elevates this Ummah under the shade of the Khilafah.

Tuesday, July 26, 2011

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)




இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.

அறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு (முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.

கடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும் வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.

ஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும் தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method) முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய கடமையாகிறது.

இங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.

அழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள் சித்தாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும், அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக, நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah) உரியது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.

அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை) மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)

இறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும், சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள். அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(ஸல்) துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை.

இதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின் பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public Opinion) தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும், அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.

இலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ, சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில் அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாக்கீஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான அல் லாத்தை (Al laat) உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும் அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன் விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அல்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால் அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். முழு அகீதாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும் (Means) தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms) பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீதாவோடு எந்தவித தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah & Tareeqah) ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.

இஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை தத்துவம் (Hyprotic Philosophy) என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy) என்றோதான் கருதுவார். அதுபோலவே குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும், அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion) அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப் பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

மக்கமா நகரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில், இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம் பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah) அகிலம் அனைத்திற்கும் உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.

தற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah) சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும். மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

அபூலஹபின் இருகரங்களும் நாசமடைவதாக. (அல் மஸ்த்:1)

நிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீங்கள் சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)
(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும் (குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)
விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)
மேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)
கனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.

விசுவாசம் கொண்டவர்களே! உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)

உங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...(அல்ஹஷர்:7)

நரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல. சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)

இவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது. அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam) அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.

குறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought), அதில் தெளிவு (Clarity in Thought) ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும்.
அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.